கடவுள்

சில்லறை இல்லையென நோட்டுகளை உள்ளேயே வைக்கும் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ அந்த பிச்சைக்காரனுக்குள்ளிருக்கும்  கடவுள்.

பாதை

ஆற்றுக்கும் மணலுக்குமான தொப்புள்கொடி நீள்கிறது அள்ளிச் செல்லும் லாரியின் கதவிடுக்கில்! – ந.சிவநேசன்

தகப்பன்சாமி

அப்பாவோடு இருந்து பார்த்த போது எல்லாமே எளிதாய் இருந்தது. அப்பாவாக இருந்து பார்க்கும் போதுதான் எல்லாமே

உசுர்

வீடில்லா மனிதன் வாழ்ந்து விடக்கூடும். மனிதனில்லா வீடு ஏனோ மரித்து விடுகிறது.

காலத்தின் கண்ணாமூச்சு

கவித்துவம் நீரோடும் காலத்தில் நதிகள் கூழாங்கற்களையும், நீர் வற்றிய காலத்தில் கூழாங்கற்கள் நதிகளையும் ஒளித்து வைக்கின்றன.

காதல் தீ

கவித்துவம் நீயாக வந்து பேசினால்தான் என்ன? எனும் வீம்பை கடக்கக் தெரியாமல்தான் அநேக பிரிவுகளும்.

மெளன ஒலி

கவித்துவம் சலனமற்ற நீர் மீது உதிர்ந்து விழும் இலை தரும் அலைகளுக்கு இசையிருக்கிறது சொற்களிருக்கிறது ஒரு

சுயநல மனிதர்கள்

கவித்துவம் பாவத்தை அரிவாளிடமும் புண்ணியத்தை கத்தியிடமும் கேளுங்கள். ஆடு எலும்பிச்சம்பழம் இரண்டுமே உங்கள் கடவுளுக்காகத்தான்.

இதயமே இதயமே

கவித்துவம் நன்றி கெட்ட இதயம் எத்தனை நாள் நான் ஊட்டி வளர்த்தேன். ஒரு புன்னகையை வீசியதும்