வாழ்க்கை அதிசயம்
பிறந்த மனிதர்கள் அனைவருமே தினமும் மரணம் நோக்கியே பயணம் செய்கிறார்கள். மரணம் நிச்சயம் என்பதை ஒவ்வொரு கணமும் ஞாபகம் வைத்துக்கொள்பவரால் மட்டுமே வாழ்க்கையை ரசித்து வாழ முடியும்.
- மாபெரும் தலைவர், மிகப்பெரும் கோடீஸ்வரர், மருத்துவ விஞ்ஞானி, மகா ஞானி என்றாலும் மரணத்திடம் இருந்து யாரும் தப்பவே முடியாது.
- நல்லவர், கெட்டவர், நோயாளி, ஆரோக்கியமானவர், முட்டாள், அறிவாளி, சிறியவர், முதியவர் என்ற பாகுபாடு மரணத்துக்கு இல்லை.
- முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு மரணம் வருவதில்லை. நோய், விபத்து, இயற்கைப் பேரழிவு போன்ற காரணங்கள் இல்லாமலும் மரணம் நிகழலாம்.
- மருத்துவமனைக்குப் போனால் உயிர் பிழைக்கலாம் என்பது உண்மை இல்லை. நிறைய மரணங்கள் மருத்துவமனையில் தான் நிகழ்கின்றன.
- தியானம், பிரார்த்தனை, பூஜை மூலம் மரணத்தை வெற்றியடைய முடியாது.
வாழ்க்கையின் மறு பக்கமே மரணம் என்பதைப் புரிந்துகொண்டு, மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
