திட்டங்களில் மெகா சாதனைகள்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 460

மேயர் பதவியில் இருப்பவர்கள் பாராட்டு விழா, விருந்துகளில் கலந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதுண்டு. இவர்களில் இருந்து முழுமையாக வித்தியாசமான நபராக இருந்தார் மேயர் சைதை துரைசாமி.

பகல், இரவு என்று பாராமல், அனைத்து நேரமும் மேயர் சைதை துரைசாமிக்கு, மாநகராட்சி பற்றியே சிந்தனையும் செயலும் இருந்ததால், இவரது காலத்தில் திட்டப்பணிகள் செம்மையாக முடிவுக்கு வந்தன. இதற்கான ஒப்பீடு இதோ..

ஸ்டாலின் அறிவித்த வரவுசெலவு திட்டங்கள்   : 159

முடிக்கப்பட்ட அறிவிப்புகள்                    :  60

இந்த வகையில் ஸ்டாலினால் நிறைவேற்றி முடிக்கப்பட்டவை மொத்தமே 33.73% மட்டுமே.

மா.சுப்பிரமணியன் அறிவித்த திட்டங்கள்        :  606

முடிக்கப்பட்ட அறிவிப்புகள்                     :  253

இந்த வகையில் மா.சுப்பிரமணியனால் நிறைவேற்றி முடிக்கப்பட்டவை மொத்தமே 41.75% மட்டுமே.

சைதை துரைசாமி அறிவித்த திட்டங்கள்         : 419

முடிக்கப்பட்ட அறிவிப்புகள்                      : 392

அதாவது, செய்வதை திருந்தச் செய்வது என்பதை சைதை துரைசாமி மிகத் தெளிவாக கடைப்பிடித்து வந்தார். அதனால்தான் அவரால் 93.55% திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. இந்த சாதனையை இனியொருவரால் முறியடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதே உண்மை. இந்த வகையில் மேயர் சைதை துரைசாமி சரித்திர சாதனை புரிந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment