ஞானகுரு தரிசனம்
கேள்வி : மனித வாழ்வில் ஜெயிப்பது விதியா.. மதியா..?
- ஜி.புஷ்பராஜ், குமாரபாளையம்.
ஞானகுரு :
தன்னுடைய தோல்விக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத நபர்கள் சொல்லும் வார்த்தையே விதி. தோல்விக்கு சரியான காரணம் கண்டறிந்து, அதனை வெல்வது மதி.
…………………….
கேள்வி : கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது ஞானகுருவுக்கு பொருந்துமா..?
- சி.விசாலாட்சி சந்திரன், படந்தால், சாத்தூர்.
ஞானகுரு :
அவரவருக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக்கொள்வது போதுமானது. மிகவும் ஆழமாக யோசிப்பது, மிகவும் தீவிரமாக காதலிப்பது, மிகவும் அதிகம் கற்பது போன்ற எல்லாமே ஆபத்தையே தரும். வீட்டு வாசலில் பூச்செடி வைப்பதற்காக விவசாயத்தை முழுமையாக கற்றுக்கொள்ளத் தேவையே இல்லை.
