கேள்வி : தவறு செய்தவர்களை திட்டுவதற்கே எனக்கு பயமாக இருக்கிறது. ஆனால், நிறைய பேர் எப்படி கொலை செய்கிறார்கள், கொள்ளை அடிக்கிறார்கள்..? – சி.ராஜவேலு, மன்னார்குடி.
ஞானகுரு :
பயம் இருப்பவர்களால் ஒருபோதும் தவறு செய்துவிட முடியாது என்பதால், இந்த பயம் நல்லது. கொலை செய்வதும், கொள்ளை அடிப்பதும் தீரச்செயல் அல்ல, குற்றம். கொலை, கொள்ளை செய்துவிட்டு யாரும் அங்கேயே நிற்பதில்லை. தப்பித்து ஓடுகிறார்கள் என்பதில் இருந்தே அவர்கள் பயத்தை அறிய முடியும்.
எனவே, பயம் இல்லாத மனிதர் உலகில் யாருமே இல்லை. தவறு நடப்பதை தட்டிக் கேட்கும் வீரன் ஒருவனுக்கு மேடையில் ஏறி பேசுவதற்குப் பயம் இருக்கலாம். 120 கி.மீ. வேகத்தில் வண்டி ஓட்டுபவருக்கு மனைவியை எதிர்த்துப் பேசுவதற்கு பயம் இருக்கலாம். இப்படி ஆளாளுக்கு பயம் இருக்கும் இடம் மாறுபடும். அவ்வளவு தான். அதேநேரம், பயம் ஏன் வருகிறது, இதில் இருந்து எப்படி வெளிவருவது என்று ஒருவர் யோசிக்கத் தொடங்கினால் நிச்சயம் பயத்தில் இருந்து வெளிவர முடியும். முயற்சி செய்து பாருங்கள்.
gyaanaguru.com Changed status to publish September 6, 2024