• Home
  • மனம்
  • நீங்கள் அதிர்ஷ்டசாலியா, இல்லையா?

நீங்கள் அதிர்ஷ்டசாலியா, இல்லையா?

Image

சிம்பிள் டெஸ்ட்

அதிர்ஷ்டம் என்ற ஒன்று இந்த உலகில் இல்லவே இல்லை, கடும் உழைப்பும் முயற்சியுமே வெற்றி தரும். அந்த வெற்றியை பெற முடியாத சிலர், அதனை அதிர்ஷ்டம் என்று அழைக்கிறார்கள்.

அதேநேரம், நம்முடைய வாழ்க்கை மட்டும் ஏன் இத்தனை சிக்கலாக இருக்கிறது என்ற கேள்வி எழாத மனிதன் யாரும் இந்த உலகில் இல்லை. அதுபோன்ற எண்ணம் உங்கள் மனதை அரிக்கும்போது, நீங்கள் இந்த அதிர்ஷ்ட கோட்பாட்டை கடைபிடித்துப் பார்க்கலாம். ஆம், இதைப் படிப்பதால், சட்டென்று மனசுக்குள் ஒரு பூ மலர்வது நிச்சயம்.

  • எந்த நோய் அறிகுறியும் இல்லாமல் காலையில் எழுந்திருக்கிறாயா..? படுக்கையில் எழுந்தரிக்காமலே உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.
  • படுத்த அரை மணி நேரத்துக்குள் தூங்கிவிடுகிறாயா..? நீ இந்த உலகிலுள்ள 50% மனிதர்களைவிட நிம்மதியாகத் தூங்கும் வாய்ப்பு பெற்றவன்.
  • நல்ல பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் உனக்கு இல்லையா..? உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்
  • மூன்று வேளை உணவு, நல்ல உடைகள், தங்குவதற்கு வீடு இருக்கிறதா..? இந்த  உலகிலுள்ள 75% மக்களை விட நீ வசதியானவன்.
  • உனக்கு வங்கியில் கொஞ்சமாவது பணம் இருக்கிறதா..? அப்படியென்றால் நீயும் ஒரு பணக்காரன். ஆம், உலகில் உள்ள 70% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை.
  • உன்னிடம் ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறதா..? இந்த உலகிலுள்ள 95% மனிதர்களுக்கு பிரத்யேக கம்ப்யூட்டர் இல்லை. எனவே, நீ பெரும்பேறு பெற்றவன்.
  • தோழன் அல்லது தோழியுடன் போய் டீ அல்லது குளிர்பானம் சாப்பிடுகிறாயா..? அடேங்கப்பா, உலகிலுள்ள 100 கோடி மக்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைப்பதே இல்லை.
  • தினமும் ஒரு முறையாவது சிரிக்கிறாயா..? இந்த உலகில் 50% பேர் ஒரே ஒரு முறைகூட சிரிக்க முடியாத அளவுக்கு துக்கத்தில் இருக்கிறார்கள்.
  • உன் நாட்டில் உள் நாட்டுப் போர் அல்லது வெளிநாட்டுப் போர் நடக்கவில்லையா..? அப்படி அவஸ்தைப்படும் 30 கோடி மக்களைவிட உனக்கு சுதந்திரம் உள்ளது.
  • உன்னிடம் பேசுவதற்கு நெருங்கிய உறவினர்கள் யாரேனும் இருக்கிறார்களா..? அப்படி இல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் 20 கோடி மக்களைவிட நீ பாக்கியவான்.
  • உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் வேலை செய்கிறாயா..? வேலை கிடைக்காத 50 கோடி மக்களைவிட உனக்கு நல்லதே நடந்துள்ளது.

இதுபோன்று, நமக்குக் கீழே உள்ளவர்கள் பற்றி ஒரே ஒரு கணம் சிந்தித்தால் போதும், நாம் எத்தனை அதிர்ஷ்டசாலி என்பதை உணர முடியும். இருப்பதைக் கொண்டு அனுபவிப்பதுதான், உண்மையான மகிழ்ச்சி

Leave a Comment