வெ.இறையன்புவின் வார்த்தைகளே வரம்

Image

மந்திரச்சொல்

வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். அந்த வகையில் முன்னாள் தலைமைச் செயலாளரின் சிந்தனைகளை படித்துப் பாருங்கள். பெரும் மாற்றத்தை உணரலாம்.

  • அறம் இதயம் சார்ந்தது. ஒழுக்கம் இடம்சார்ந்தது.
  • எண்ணங்கள் ஆழ்கடல். சொற்கள் அலைகடல் .
  • உலகில் தேடுபவன் விஞ்ஞானி. உள்ளே தேடுபவன் மெய்ஞானி.
  • இருக்கும்போது அருமை தெரியாதவற்றில் உடல்நலமும் ஒன்று .
  • நமக்கு உதவுபவர்களைத்தான் நாம் அதிகம் கோபித்துக் கொள்கிறோம்.
  • அழகாய் இருந்தாலும் பூக்களை  உதிர்த்துவிடுகின்றன செடிகள்.
  • சிரிக்கும்போது மட்டுமே நாம் நிகழ்காலத்தில் நிறைந்திருக்கிறோம்.
  • நோக்கமே பயணத்தின் பரவசத்தைத் தீர்மானிக்கிறது.
  • இயற்கை தாவரங்களைப் படைத்தது, மனிதன் களைகளைக் கண்டுபிடித்தான்.
  • விளக்கில் இல்லை, விழிகளில் உள்ளது வெளிச்சம்.
  • நோயாளிகளுக்கு மருத்துவர் அளிக்கும் முதல் மருந்தே நம்பிக்கைதான்.
  • ஒரே மழைதான். அல்லியில் மலராகிறது, கள்ளியில் முள்ளாகிறது.
  • சத்தியம் என்ற முன்னுரையுடன்தான் பெரும்பாலான பொய்கள் பேசப்படுகின்றன.

Leave a Comment