சீடர் : விஷம்?
ரூமி : நம் தேவைக்கு அதிகமாக இருப்பது எதுவோ அதுதான்
விஷம். அது அதிகாரமாக, செல்வமாக, அன்பு, வெறுப்பு, பசியாகவும் இருக்கலாம்.
சீடர் : பயம் ?
ரூமி : நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது
பயம். நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளும்போது அது சாகசம் ஆகிவிடும்
சீடர் : பொறாமை ?
ரூமி : மற்றவர்களிடம் இருக்கும் நல்லவற்றை ஏற்றுக்கொள்ளாமல்
இருப்பதே பொறாமை. அப்படி ஏற்றுக்கொள்ளும் போது அவர் உனக்கு உத்வேகம் தரக்கூடியவராக
மாறிவிடுகிறார்
சீடர் : கோபம் ?
ரூமி : நம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை ஏற்றுக்கொள்ளாமல்
இருப்பது கோபம். அப்படி ஏற்றுக்கொள்ளும்போது அது சகிப்புத்தன்மை ஆகிவிடுகிறது
சீடர் : வெறுப்பு ?
ரூமி: இன்னொரு மனிதனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பது
வெறுப்பு. நிபந்தனைகள் இன்றி ஏற்றுக்கொள்ளும்போது அது அன்பாகிவிடுகிறது.