ரூமி எனும் அமிர்தம்

Image

சீடர் : விஷம்?

ரூமி : நம் தேவைக்கு அதிகமாக இருப்பது எதுவோ அதுதான்
விஷம். அது அதிகாரமாக, செல்வமாக, அன்பு, வெறுப்பு, பசியாகவும் இருக்கலாம்.

சீடர் : பயம் ?

ரூமி : நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது
பயம். நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளும்போது அது சாகசம் ஆகிவிடும்

சீடர் : பொறாமை ?

ரூமி : மற்றவர்களிடம் இருக்கும் நல்லவற்றை ஏற்றுக்கொள்ளாமல்
இருப்பதே பொறாமை. அப்படி ஏற்றுக்கொள்ளும் போது அவர் உனக்கு உத்வேகம் தரக்கூடியவராக
மாறிவிடுகிறார்

சீடர் : கோபம் ?

ரூமி : நம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை ஏற்றுக்கொள்ளாமல்
இருப்பது கோபம். அப்படி ஏற்றுக்கொள்ளும்போது அது சகிப்புத்தன்மை ஆகிவிடுகிறது

சீடர் : வெறுப்பு ?

ரூமி: இன்னொரு மனிதனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பது
வெறுப்பு. நிபந்தனைகள் இன்றி ஏற்றுக்கொள்ளும்போது அது அன்பாகிவிடுகிறது.

Leave a Comment