ஞானகுரு :
நூறு சதவிகிதம் ஒற்றுமையான தம்பதி, ஆதர்ச தம்பதி, லட்சியத் தம்பதி என இந்த உலகில் யாருமே இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இரண்டு பேர் என்றாலே தனித்தனி கருத்துக்கள், சிந்தனைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும். இதன் எல்லையை ஒருவருக்கொருவர் பேசி வரையறை செய்துகொண்டால் நிறைய பிரச்னைகள் எழாது.
எத்தனை நல்லவர்கள் என்றாலும் அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் வரவே செயும். எனவே, கருத்துவேறுபாடுகளை முற்றிலும் நீக்க முடியாது, நீக்கவும் வேண்டாம். நிறை, குறைகளுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் முக்கியம். தனியே வாழ்ந்து என்ன செய்துவிடப் போகிறோம், சேர்ந்தே வாழ்வோம் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் நல்ல நண்பர்களாக இருவரும் மாறிவிட முடியும்.
gyaanaguru.com Changed status to publish September 28, 2024