ஞானகுரு :
தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை பிறர் பறித்துக்கொள்வார்கள் என்று நினைப்பவர்களே அஞ்சுகிறார்கள். மகிழ்ச்சிக்குக் காரணம் தன்னுடைய உழைப்பு, தன்னுடைய திறமை, தன்னுடைய அதிர்ஷ்டம் என்ற எண்ணம் உள்ளவர்கள் மட்டுமே பிறரிடம் பகிர்வதில்லை. தனக்கு வரும் துன்பத்துக்கும் தோல்விக்கும் மற்றவர்களே காரணம் என்று நினைக்கிறார்கள். அதனாலே, வருத்தம், சோகத்தை மட்டும் பிறரிடம் சொல்லி மனதை தேற்றிக்கொள்கிறார்கள். உண்மையில் மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மேலும் அதிக மகிழ்ச்சி தரும். துன்பங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். அது குறைந்தே போகும். இதற்காகவே உறவுகள், நட்புகள் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறார்கள்.
gyaanaguru.com Changed status to publish September 24, 2024