ஞானகுரு :
நாய், பூனை, ஆடு போன்ற உயிரினங்களை காப்பாற்றுவது மனிதனின் கடமை என்று மனிதன் பொய்யாக ஒரு கதை கட்டியிருக்கிறான். உண்மை அதுவல்ல. மனிதரை நம்பி எந்த விலங்கும், பறவையும் இல்லை. மனிதருக்கே அவை தேவைப்படுகின்றன. மேலும், ஆதாயம் இல்லாமல் மனிதன் எதையும் ஒருபோதும் செய்ததில்லை, செய்யவும் மாட்டான்.
அவனுடைய பாதுகாப்புக்கு, அன்பு செலுத்துவதற்கு, பொழுது போக்குவதற்கு ஏதேனும் உயிருள்ள ஒன்று தேவைப்படுகிறது. அதனாலே எடுத்து வளர்க்கிறான். நீங்கள் உணவளித்து எந்த மிருகத்தையும் காப்பாற்றத் தேவையில்லை. ரோட்டில் அனாதையாக கிடக்கும் ஒரு குழந்தையை எந்த நாயாவது எடுத்துச் சென்று வளர்க்கும் என்றால், நீங்களும் அனாதை விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.
gyaanaguru.com Changed status to publish October 13, 2024