அன்னையர் தினத்தில் இதை செய்யுங்க ப்ளீஸ்

Image

காய்களில் பூச்சிக்கொல்லி எச்சரிக்கை

அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அன்னையருக்கு வாழ்த்து, பாராட்டுகள் வழங்குவதை விட, அவர்களுடைய உடல் பரிசோதனைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற் மருத்துவர் வீ.புகழேந்தி ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை எழுதியிருக்கிறார்.

அந்த கட்டுரையில் அவர், ‘’பாதுகாப்பான உணவு என்ற திட்டத்தின் கீழ் கேரளாவில் செய்த ஆய்வில் 21.29 % பழங்கள்,காய்கறிகளில் பூச்சிக்கொல்லி எச்சம் அதிகமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. 202 மாதிரிகளில்,28 வகை காய்கறிகள்,15 வகை பழங்களில்(43 மாதிரிகள்) பூச்சிக்கொல்லி எச்சம் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்துள்ளது.

இதற்கு முன்னர் 2024ல் திருவனந்தபுரம்,கோழிக்கோடு,வயநாடு மாவட்டங்களில்,அக்டோபர் – டிசம்பரில் செய்த ஆய்வில்,15.26 மாதிரிகளில் பூச்சிக்கொல்லி எச்சம் அதிகமாக இருந்துள்ளது.

2025 ஆய்வில்,குறிப்பாக, வெண்டைக்காய், கத்தரிக்காய்,குடைமிளகாய்,கேரட்,இஞ்சி,நெல்லிக்கனி,பச்சை மிளகாய்,உருளைக்கிழங்கு,சில வகை பீன்ஸ் போன்ற காய்கறிகளிலும்,ஆப்பிள், சப்போட்டா, திராட்சை, கொய்யா, மொசம்பி, மாதுளம் பழம், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, வெள்ளைப் பூண்டு, கொத்தமல்லி இலைகளிலும்

நாம் உண்ணும் உணவே நஞ்சானால்,

புற்றுநோய் (பெருங்குடல்,பிற இனப்பெருக்க உறுப்புகள்) நரம்பு மண்டலம் பாதிப்பு (தலைச்சுற்றல், நடுக்கம், வலிப்பு) ஹார்மோன் பாதிப்பு நோய்கள், வளர்பருவ பாதிப்புகள்,மலட்டுத்தன்மை, இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு,பிறவிக்கோளாறுகள், சிறுநீரகங்கள், ஈரல், நுரையீரல் பாதிப்புகள் (நாள்பட்டபாதிப்புகள்) ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

உடனடி பாதிப்பாக, தலைவலி, தலைச்சுற்றல், தோல் சிவந்து தடித்தல், வாந்தி/பேதி போன்றவை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. மேலும், குறைப் பிரசவம், குழந்தையின்மை, குழந்தை இறந்தே பிறத்தல், குறைந்த எடையோடு குழந்தை பிறத்தல், கருக்கலைப்பு போன்ற பாதிப்புகளும் அதிகம் எற்படும் வாய்ப்பும் நிறைய உள்ளது.

இதில் வேதனை என்னவெனில்,குழந்தைகளும்,அன்னையர்களும் தான் பூச்சிக்கொல்லிகளின் அதிக பாதிப்பிற்கு ஆளாவார்கள்.

1) பூச்சிக்கொல்லிகள் ஹார்மோன் பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்தும். அவற்றின் வடிவமைப்பு ஹார்மோன்களைப் போல் இருப்பதால் பாதிப்பு(Endocrine Disruptors)நிகழ்கிறது.

2) பூச்சிக்கொல்லிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி (Oxidative Stress), பிரி ரேடிக்கல்கள் செல்களில் அதிகமாகி, புரதங்கள், டி.என்.ஏ பாதிப்புகள் அதிகமாகி, செல்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அவை இறக்கின்றன.

அன்னையர்களை கூடுதலாக பாதிக்கும் பூச்சிக்கொல்லி எச்சம் காய்கறிகள்/பழங்களில் அதிகம் இருப்பது கேரளத்தில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் அதிகமாக இருப்பது மிகுந்த வேதனை தரக்கூடிய அன்னையர் தின செய்தியாக இருப்பதால், மக்களும்,அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அன்னையர்களை பூச்சிக்கொல்லிகைளின் அதிக எச்ச பாதிப்பிலிருந்து காக்க விரைந்து முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றைய தினத்தில் அன்னைக்கு மருத்துவப் பரிசோதனை செய்து பாதுகாப்பு கொடுப்பதே உண்மையான அன்னையர் தின வாழ்த்தாக இருக்கும்.

Leave a Comment