உண்மை என்பது உண்மையன்றி, வேறில்லை..!
‘யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ? அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது. குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’ என்று சொல்வார். Life goes on. இந்த அதீதமான சோகத்தை மறக்க, சீக்கிரமே அன்றாடப் பணிக்குத் திரும்புவது முக்கியம். அதையே நினைத்துக்கொண்டு மறுகினால், எண்ணங்கள் நம்மைச் சாப்பிட்டுவிடும்.
- எழுத்தாளர் சுஜாதா
எவையெல்லாம் உன்னுடையது இல்லையோ,அவற்றையெல்லாம் உன்னிடமிருந்து விடுதலை செய். நீ கொடுக்கின்ற விடுதலை தான், வரப்போகிற காலத்தில் உனது மகிழ்ச்சிக்கான பாதை.
- புத்தர்
யார் உங்களை நேசித்தாலும் யார் உங்களை வெறுத்தாலும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில் நேசிப்பதும் வெறுப்பதும் அவர்கள் பிரச்சினை உங்களுடையது அல்ல.
- ஓஷோ
உங்களை எதுவொன்று அழ வைக்கிறதோ,அடிமைபடுத்துகிறதோ,பிரக்ஞையற்று திரியச் செய்கிறதோ,புலம்ப விடுகிறதோ அதனை அன்பென்று பெயரிடுங்கள். அன்பு ஆபத்தான மிருகம் பழக்கி வைத்தாலும் உயிர் பருகியே தீரும்.
– கோ. சாமான்யன்
மனம் அனுபவிப்பதை (experience) நிறுத்தும் வரை தெரியாததை அனுபவித்தல் (experiencing) என்பது சாத்தியமாகாது.
- ஜே.கே
எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளி தேவைப்படுகிறது. சில சமயம் தூரத்தின் இடைவெளி, சிலசமயம் காலத்தின் இடைவெளி.
- சுந்தர ராமசாமி
ஒவ்வொருவரும் எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்று எண்ணியே காரியமாற்றுகிறார்கள். ஆனால், அதில் யாருமே முழு வெற்றி காண்பதில்லை. காண முடிவதில்லை; காண்பதிலும் சிறப்பில்லை.
- ஜெயகாந்தன்
எந்த சித்தாந்தங்களுக்குள்ளும் சிக்காத எந்த தத்துவங்களுக்குள்ளும் அடங்காத மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறோம் கருணையற்ற இந்த காலப்பெருவெள்ளத்தில்.
- வழிப்போக்கன்