செல்போன் மேனர்ஸ்..!

Image

தெரிஞ்சுக்கோங்க பாஸ்


இன்று எல்லோருக்கும் அத்தியாவசியமாக மட்டுமின்றி  பொழுதுபோக்கு அம்சமாகவும்  இருப்பது செல்போன்கள். அதன்மூலம் நாம் எக்கச்சக்க  பயன்களை அடைந்தாலும், அதனால் வரும் ஆபத்தும் அதிகம். அதிலும், ஆண்களைவிட இன்றைய பெண்கள் இந்த மொபைல் போன்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

மொபைல் போன் என்பதும் கத்தியைப் போன்றதுதான். சரியாக பயன்படுத்தினால், அது பயனுள்ளதாக இருக்கும். அப்படி, மொபைல் போன்களை சரிவர பயன்படுத்துவதற்கு  சில வழிமுறைகளும், பண்பாடுகளும் உள்ளன. அவற்றை அறிந்துகொண்டு அதன்படி செயல்பட்டால் அனைவருக்கும் நல்ல பயன்கள் கிடைக்கும்.  அதற்கான சில எளிய வழிமுறைகள் இதோ….

  • கழிவறைக்கும் செல்போன் கொண்டுசெல்லும் பழக்கத்தை முழுமையாக நிறுத்துங்கள். இது, செல்போன் உங்கள் மீதான ஆதிக்கம் செய்வதைக் காட்டுகிறது என்பதுடன், சுகாதார ரீதியிலும் சரியில்லை.
  • பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடங்களில் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்தாதீர்கள்.
  • பொது இடங்களில் இருக்கும் நேரத்தில் அழைப்பு மணியின் ஒலியளவைக் குறைவாக வைத்திருங்கள். திடீரென்று சத்தத்துடன் அலறுவது அருகில் உள்ளவர்கள் எரிச்சலும் அதிர்ச்சியும் தரும்.
  • செல்போனின் அழைப்பு மணி ஒலித்தால் உடனே அதற்குப் பதில் கொடுக்க வேண்டும்  அல்லது அழைப்பு மணியை நிறுத்த வேண்டும். தொடர்ந்து அழைப்பு மணியை ஒலிக்கவிட்டால் அது மற்றவர்களுக்கு நிச்சயம் அசெளகரியத்தை ஏற்படுத்தும்.
  • பொது இடங்களில் மெதுவாகப் பேசுவது என்றாலும் நீண்ட நேரம் பேச வேண்டாம். உங்கள் கவனத்தை சிதறடித்துவிடும். ஆபத்தை உணரமுடியாமல் போய்விடும்.
  • பொது இடங்களில் இருக்கும்போது உங்கள் குரலை உயர்த்தி மொபைல் போனில் பேச வேண்டாம். இது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். மேலும் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்கும் நிலையும் ஏற்படும். அதுபோல், பொது இடங்களில் இருக்கும்போது மொபைல் போனில் விளையாடவும் வேண்டாம். அப்படி விளையாடுவதாக இருந்தால், ஒலி அளவைக் குறைத்து வைத்துக்கொள்ள வேண்டும். செல்போன் வெளிச்சம் அடுத்தவர் மீது படக்கூடாது.
  • பிரபலங்களைப் பார்த்தாலும் பொது இடங்களில்  அனுமதி இல்லாமல் அவர்களை புகைப்படம் எடுக்கக் கூடாது. அதுபோல சினிமா அரங்கம் மற்றும் விழாக்களின்போது மொபைல் போனில் அழைப்பு வந்தால் அங்கிருந்து வெளியே சென்று பேச வேண்டும் அல்லது அணைத்து வைக்க வேண்டும். மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட இடங்களில் போன் பேசுவதைத் தவிர்க்கலாம்.

செல்போன் என்பது உங்களுடைய பயன்பாட்டுக்கு மட்டும்தான். அதனை பிறர் பார்த்து ரசிக்கவும் வேண்டாம், எரிச்சலடையவும் வேண்டாம். உங்களிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளும் வகையில் செல்போன் மேனரிசம் இருக்கட்டும். அதுவே, உங்களுடைய மதிப்பை உயர்த்தும்.

Leave a Comment