என்ன செய்தார் சைதை துரைசாமி – 248
சைக்கிள் ஓட்டுவதன் நன்மை குறித்து மக்களுக்கு எடுத்துச்சொன்னாலும், சைக்கிள் வாங்குவது, பராமரிப்பது மட்டுமின்றி அதனை பாதுகாப்பதும் மிகுந்த சிக்கலான விஷயம் என்று மேயர் சைதை துரைசாமிக்கு அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள். எந்த ஒரு பிரச்னை என்றாலும், அதற்கு ஒரு தீர்வு இருக்கும் என்பதை மேயர் சைதை துரைசாமி அறிவார். ஆகவே, முன்னேறிய வெளிநாடுகளில் சைக்கிள் பயணம் எப்படி நடைபெறுகிறது என்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைபடி சைக்கிள் சேரிங் என்ற திட்டத்தை பெருநகர சென்னைக்கு அறிமுகம் செய்வதற்குத் திட்டமிட்டார்.
வெளிநாட்டு பாணியில் சைக்கிள் சேரிங் திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற மேயர் சைதை துரைசாமியை பலரும் ஏளனமாகவே பார்த்தார்கள். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாது, நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால், பெருநகர சென்னை மக்களும் வெளிநாட்டு மக்கள் போன்று சைக்கிள் சேரிங் திட்டத்தின் பலனை அனுபவிக்க வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியுடன் இருந்தார்.
அதாவது சைக்கிள் வாங்குவது, பராமரிப்பது, அதனை பத்திரப்படுத்தி வைப்பது போன்ற எந்த பிரச்னையும் மக்களுக்கு இல்லாமல் சுலபமான முறையில் சைக்கிள் கிடைப்பதை உறுதி செய்தால் நிச்சயம் மக்கள் சைக்கிள் பயணத்துக்கு மாறுவார்கள் என்று நம்பினார். அதன் அடிப்படையில், மேலை நாட்டு நடைமுறையைப் பின்பற்றி சைக்கிள் சேரிங் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் அறிமுகம் செய்வதற்கு முன்வந்தார்.
பெருநகர சென்னையில் முக்கியமான பஸ் நிலையம், பஸ் நிறுத்தம், முக்கிய சந்திப்புகள், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் போன்ற முக்கிய இடங்களுக்கு அருகே சைக்கிள் நிறுத்தங்கள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதை மக்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். உண்மையான அக்கறையும் முயற்சியும் இருந்தால் எதையும் செய்ய முடியும் எனும் வகையில் சைக்கிள் சேரிங் திட்டத்தை சாத்தியமாக்கிக் காட்டினார் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.