வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன.
ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும்.
ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும்,
ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.
சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும்.
சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும்.
சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும்.
ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள்.
மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.
