மோசமான எதிரி உதயநிதி
விஜய் கொடியை அறிமுகம் செய்தவுடனே அவரது ரசிகர்களிடம் பெரும் எழுச்சி தென்படுகிறது. வரும் 2026 தேர்தலில் எளிதாக தேர்தலில் ஜெயித்துவிடுவார் என்று கொண்டாடுகிறார்கள். நடிகர் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு மட்டும் போதாது, இன்றைய பண அரசியலை அவரால் வெல்ல முடியுமா என்பது கேள்வியாக மாறியிருக்கிறது.
இதுகுறித்து மூத்த அரசியல்வாதியான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ‘’நடிகர் விஜய்யைப் பொருத்தவரை அவர் கடந்த 30 ஆண்டுகளாக மேலாக மக்களிடையே மிகவும் அறிமுகம் பெற்றவராக வீட்டுத் தொலைக்காட்சியில் வீடுகளில் அடிக்கடி வந்தவராக எல்லோருக்கும் அறிமுகமானவராக தன் படங்களில் கூட அரசியல் சரி நியாயங்கள் குறித்த தீவிரமான காட்சிகளை அமைத்தவராக நடித்தவராக செல்வாக்கு பெற்று இருக்கிறார்.
அத்துடன் அவருக்கு கர்நாடகா தெலுங்கானா கேரளா போன்ற பிற மாநிலங்களில் கூட செல்வாக்கு உண்டு. அகில இந்திய அளவிலும் கூட நடிகர் விஜய் என்று அறியப்பட்டவர்.
ஆனால், விஜய்க்கு பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு வாங்கும் முறையை அவர் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பது ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும். ஆண்ட பரம்பரை அவர்கள் இவர்கள் நாங்கள்தான் ஆள வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கக்கூடிய ஒரு பெரும் வாரிசுக் கூட்டத்தைச் சமாளிக்க வேண்டியது வரும்.
இன்றைக்குள்ள நிலையில் பெருமளவு பொருளாதாரம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது! அது அதிகமாக தேவைப்படுகிற சூழலில் தான் அரசியல் பணத்தில் கூலி பெறும் சமூக ஊடகங்கள், புகழ்பாடும் பத்திரிகா தர்மற்ற தினசரிகள்- தொலைகாட்சிகள் ஆட்சிகளும் தந்திரமாக அமைகிறது. அந்த வகையில் ஓட்டுக்குக் காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கிற மக்கள் முறையை எதிர்கொள்வதில் நடிகர் விஜய்க்கு சிரமம் இருக்கலாம்.
மிகப்பெரிய தொகை செலவு செய்ய முடிந்தவர்கள் தேர்தல் அரசியலுக்கு வரமுடியும் என்ற நிலை. தேர்தல் அரசியல் என்றால் 5000 கோடி செலவு செய்யும் திராணி இருந்தால் கட்சி தலைமை தேர்தலில் போட்டியிடலாம். அப்படியான மோசமான நடைமுறைகளைத் தாண்டி அதை நீக்க அவர் மக்களைச் சந்தித்து தமிழகத்தின் உண்மையான பிரச்சனைகள் என்ன என்பதை கணக்கெடுத்து அதை தனது அரசியல் பணியாக முன்வைப்பாரா..?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நியாயமான கேள்விகள். இதற்கு விஜய்யிடம் பதில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இப்போது சினிமா அறிமுகம் மட்டுமின்றி கோடி கோடியாக பணம் வைத்திருக்கும் உதயநிதியே விஜய்க்கு எதிரியாக இருக்கிறார். இவரை சமாளிப்பாரா..?
காலமே பதில் சொல்லும்.