• Home
  • சட்டம்
  • கணவனுக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா..?

கணவனுக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா..?

Image

விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா

காலம் முழுவதும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற ஆசையிலே அத்தனை பேரும் திருமணம் முடிக்கிறார்கள். ஆனால், எல்லா திருமண உறவுகளும் அப்படி நல்லபடியாக காலம் முழுக்க இருப்பதில்லை. சின்னச்சின்ன பிரச்னைகளால் கணவன், மனைவி உறவுக்குள் தோன்றும் பிரச்னைகள் விவாகரத்து வரை சென்றுவிடுகிறது.

கல்யாணம் முடிப்பதற்கு உரிமை இருப்பது போன்று விவாகரத்து செய்வதற்கும் அத்தனை பேருக்கும் உரிமை உண்டு. ஏமாற்றி திருமணம் முடித்தல், குடும்ப வன்முறை, வரதட்சனைக் கொடுமை, பாலியல் விவகாரம் என்று பல்வேறு காரணங்களைக் காட்டி விவாகரத்து கோருகிறார்கள்.

என்ன பிரச்னை என்றாலும் கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று இப்போது சமூகமும் கட்டாயப்படுத்துவதில்லை. வாழ்க்கையில் தேவையில்லாமல் ஒருவரையொருவர் சந்தேகப்பட்டு சண்டை போட்டு வாழ்வதை விட, பிரிந்திருந்து சுதந்திரமாக வாழ்வதே நல்லது என்று முடிவெடுக்கிறார்கள்.

இந்த சூழலில் குழந்தை யாருடன் இருக்கும், ஜீவனாம்சம் எவ்வளவு தர வேண்டும், கணவனுக்கும் ஜீவனாம்சம் உண்டா என்று பல்வேறு சந்தேகம் வரலாம். இதுபோன்று எக்கச்சக்க சந்தேகங்கள் வருவதுண்டு. அத்தனை சந்தேகங்களுக்கும் சட்டத்தில் விடை இருக்கிறது.

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு சட்டம் ஒரு வகுப்பறை என்ற நிகழ்ச்சியை யாழினியுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார் பிரபல வழக்கறிஞர் நிலா. போன் செய்தும் சந்தேகம் கேட்கலாம். சட்டத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேட்கலாம். உங்கள் சந்தேகங்களை நிலா நிச்சயம் தீர்த்து வைப்பார்.

YouTube player

Leave a Comment