• Home
  • யாக்கை
  • கல்யாணம் முடித்தால், குழந்தை பிறந்தால் மன அழுத்தம் சரியாகிவிடுமா..?

கல்யாணம் முடித்தால், குழந்தை பிறந்தால் மன அழுத்தம் சரியாகிவிடுமா..?

Image

உண்மையைத் தெரிஞ்சுக்கோங்க.

தாய்மை என்பது ஒரு வரம் என்றே பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் தாய்மை, கர்ப்பம், குழந்தைப் பிறப்பு போன்றவைகளின் அடிப்படையில் எக்கச்சக்க பொய் நம்பிக்கைகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. உண்மை என்னவென்று பார்க்கலாம்

நம்பிக்கை ; குழந்தை பிறந்தால் மன அழுத்தம் சரியாகும்.

உண்மை ; மன அழுத்தம், மன இறுக்கம், மனதில் தடுமாற்றம் உள்ள பெண்களுக்கு திருமணம் முடித்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் அந்த பிரச்னை தீர்ந்துவிடும் என்று பலரும் சொல்வதுண்டு. மன அழுத்தம் காரணமாக ஹார்மோன்களில் சீரற்ற நிலை ஏற்படும் என்பதே உண்மை. இதனால் மாதவிடாய்ச் சுழற்சி, கருமுட்டை வெளியேற்றநிலை அனைத்தும் பாதிக்கப்படும். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு கருத்தரிப்பதே சிக்கலாக இருக்கும். ஆகவே, இது போன்ற காரணங்களுக்காக யாருக்கும் திருமணம் செய்துவைக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவதும் கூடாது. உண்மையில் திருமணம், கர்ப்பம், குழந்தை பிறப்பு காரணமாக பெண்கள் கூடுதல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு இந்த காலகட்டத்தில் ஆறுதலான உறவு இருக்கவேண்டியது முக்கியம்.

நம்பிக்கை ; மது குடித்தால் சீக்கிரம் குழந்தை பிறக்கும்

உண்மை ; மது குடிக்கும் ஆண்களும் பெண்களும் நிறைய குழந்தை பெறுகிறார்கள் என்று ஒரு கட்டுக்கதை உலவுகிறது. உண்மையில் மதுப் பழக்கம் மட்டுமின்றி புகைப்பழக்கமும் குழந்தைப்பேற்றை பாதிக்கும். ஆண்களுக்குப் புகைப்பழக்கம் இருந்தால், அது உயிரணுக்களை பாதிக்கும். பெண்கள் புகைபிடிக்கும் பட்சத்தில் சினைப்பையில் கருமுட்டைகள் வளர்வது பாதிக்கப்படும். இவை இரண்டுமே குழந்தையின்மைப் பிரச்னையை ஏற்படுத்தும்.

நம்பிக்கை : கருத்தடை மாத்திரைகளால் ஆபத்து கிடையாது.

உண்மை : மாதவிலக்கை தள்ளிப் போடுவதற்கும் கருத்தடைக்கு மாத்திரை எடுத்துக்கொள்வதாலும் குழந்தை பிறப்புக்கு பாதிப்பு இல்லை என்றே பலரும் தொடர்ந்து கடைபிடிக்கிறார்கள். கருத்தடைக்காக மாத்திரைகள் உட்கொள்ளும்போது கருத்தரிக்க முடியாது. ஆனால், மாத்திரை சாப்பிட்டு முடித்த பிறகு கருத்தரிப்பதில் பிரச்னை இருக்காது. ஆனால், கருத்தடைக்காக மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் அதிகபட்சம் ஓராண்டு மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுப்பதால், பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும். குழந்தை பேறு கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு.

நம்பிக்கை ; ஆண்களின் உயிரணுக்கள் எப்போதும் தரமாகவே இருக்கும்.

உண்மை : குழந்தை பெற்றுக்கொண்ட ஆண் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும், எப்போதும் அவரது உயிரணு அதே தரத்துடன் திகழும் என்றே பலரும் நம்புகிறார்கள். ஆண்களுக்கு விந்து நீரிலும் விந்தணுக்களிலும் எப்போது வேண்டுமானாலும் பாதிப்புகள் ஏற்படலாம். சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் காரணமாகவும், மது மற்றும் புகைப்பழக்கம் காரணமாகவும் உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் பாதிக்கப்படுகிறது என்பதே உண்மை.

Leave a Comment