• Home
  • உறவுகள்
  • பெற்றோர்கள் ஏன் இத்தனை கட்டுப்பாடு விதிக்கிறார்கள்..?

பெற்றோர்கள் ஏன் இத்தனை கட்டுப்பாடு விதிக்கிறார்கள்..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : இன்பமும் துன்பமும் விதியின் பயனா… மதியின் பயனா?

  • ஏ.ஜான்சன், என்.ஜி.ஓ. காலனி.

ஞானகுரு :

விதிப்படி நூறு வயதில் தான் மரணம் என்று தெரிந்தாலும், ரோட்டில் நடக்கும்போது இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வண்டி வருகிறதா என்று பார்த்துவிட்டே கடப்பார்கள். விதி என்று கற்பிக்கப்பட்டிருக்கும் கட்டுக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை, அறிவியலும் இல்லை. எனவே, விதியை நம்பி ஏமாறாமல் மதியுடன் போராடுங்கள். நன்மையும் தீமைக்கும் நீங்களே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டால் மதியின் நன்மை புரியும்.

கேள்வி : வேலி பயிரை மேய்வதற்குக் காரணம் பேராசையா… நிராசையா?

  • பி.புஷ்பகுமார், ஆர்.ஆர்.நகர்.

ஞானகுரு :

வேலி பயிரை மேய்வதும் இயற்கையே. வெள்ளெலிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். எக்கச்சக்கமாக குட்டிகள் போடும். திடீரென அவற்றில் ஒன்றிரண்டை வெள்ளெலி தின்று விடுவதுண்டு. நாய், பூனை, பாம்பு, மீன் போன்ற சில உயிரினங்களும் இப்படி செய்வதுண்டு. அப்படித்தான் பயிரை மேயும் வேலிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். எங்காவது ஒன்றிரண்டு பேர் தவறு செய்வதால் வேலியை ஒட்டுமொத்தமாக எடுத்துவிட முடியாது.

கேள்வி : எழுவது, நடப்பது என்று எல்லா விஷயங்களுக்கும் அனுமதி பெற வேண்டும் என்று பெற்றோர் நினைப்பது சரியா?

  • என்.பேச்சியம்மாள், அல்லம்பட்டி.

ஞானகுரு ;

பெற்றோருக்கு அப்படி நினைப்பதற்குக் கூட உரிமை இல்லையா? பெற்றோர் சொல்வதை இன்று கேட்பதில்லை, கேட்கப் போவதும் இல்லை. பிறகு எதற்கு இந்த கேள்வி..?

Leave a Comment