திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது. அதில் எந்த தீர்வும் ஏற்படாத நிலையில், திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கடவுளை தரிசிக்க போன பக்தர்களை காப்பாற்ற கடவுள் ஏன் வரவில்லை? தன் பக்தர்களைக் காப்பாற்ற வராத கடவுள் மக்களை காப்பாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 10ம் தேதி, அதாவது நாளை நடைபெற உள்ளது. ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும். சொர்க்க வாசல் திறப்புக்கு பிறகு பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தை முன்னிட்டு தேவஸ்தானம் சார்பில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிவித்தது. இதையடுத்து இந்த இலவச தரிசன டோக்கன்களை வாங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். சேலத்தை பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவின் திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தால் மக்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். திருப்பதி பாலாஜிக்கு மயிரை மட்டும் கொடுப்பது மக்களின் வழக்கம், இப்போது உயிரையும் கொடுத்திருக்கிறார். இலவசம் 6 உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது. கடவுளின் பெயரால் இன்னும் எத்தனை மரணங்களைப் பார்க்கப் போகிறோம் என்பது தெரியவில்லை.
அதேநேரம் கடவுளின் பக்தர்கள், ‘’இறந்தவங்க கொடுத்து வைச்சவங்க, நேரடியாக சொர்க்கத்துக்கே போயிட்டாங்க’’ புல்லரிக்கிறார்கள். உருப்பட்ட மாதிரிதான்.