• Home
  • சர்ச்சை
  • சீக்கிய மதத்தினருக்கு ஏன் இத்தனை கொலை வெறி.?

சீக்கிய மதத்தினருக்கு ஏன் இத்தனை கொலை வெறி.?

Image

மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு

பொற்கோவிலுக்குள் ராணுவம் அனுப்பியதற்காக இந்திரா காந்தியை சல்லடையாக் சுட்டுக் கொலை செய்த சீக்கிய மதத்தில் அடுத்தடுத்து எக்கச்சக்க மதவெறிக் கொலை நடந்திருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக இப்போது சிரோன்மணி அகாலி தளம் கட்சி தலைவர் சுகுபீர் சிங் பாதல் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் குறித்துப் பேசுபவர்கள், ‘’பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வரான 62 வயதான சுகுபிர் சிங் பாதல், மற்றும் அகாலிதளம் கட்சியை சேர்ந்த சிலருக்கு டான்கா என்னும் சீக்கிய மத தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் கடந்த 2007 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான பஞ்சாப் ஆட்சி காலத்தில் சிரோன்மணி அகாலிதளம் பல தவறுகளை செய்ததாகவும் அதற்காகத்தான் இந்த தண்டனை விதிக்கப்படுவதாக சீக்கிய மதத்தின் அதிகார நிர்வாகம் அறிவிக்க அதை ஏற்றுக் கொண்டு பல்வேறு குருதுவாராக்களில் பக்தர்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவுதல் அவர்களது காலணிகளை சுத்தப்படுத்துதல் போன்றவற்றை செய்து வந்தனர்.

தாங்கள் சேவை செய்பவர்கள் தான் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த தண்டனை இவர்களுக்கு விதிக்கப்பட அவர்களும் அதை செய்து வந்தனர். கடந்த இரண்டு நாட்களாகவே சேவகர்கள் என்பதை எடுத்துரைக்கும் நீல நிற சீருடை அணிந்து குருதுவாராக்களில் தண்டனையை அனுபவித்து வந்த முன்னாள் துணை முதல்வர் சுகுபிர் சிங் பாதல், இன்று சீக்கியர்களின் புனித கோயிலான பொற்கோவிலில் தண்டனையை அனுபவித்து வந்த போது நாராயண் சிங் சௌரா என்ற நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இவருக்கு இன்னும் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக தகவல். சீக்கிய மதத்தை அவமதிப்பவர்களை கொலை செய்வதை தீவிர சீக்கிய பற்றாளர்கள் செய்து வருகின்றனர்’’ என்கிறார்கள்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கூட நபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றது. ரத்தம் கேட்கிறதா சீக்கிய மதம் என்பதே கேள்வி.

Leave a Comment