• Home
  • அழகு
  • கேரள பெண்கள் மட்டும் ஏன் இத்தனை அழகு..?

கேரள பெண்கள் மட்டும் ஏன் இத்தனை அழகு..?

Image

பியூட்டி டிப்ஸ்

சினிமா நடிகைகளில் பெரும்பாலோர் கேரள இறக்குமதியாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் உடல் வனப்பும், மினுமினுப்பும் அத்தனை அம்சமாக இருக்கிறது. அதனால், அவர்களுடைய அழகு பெண்களையே மிரள வைக்கிறது.

ஏன், அவர்கள் மட்டும் இத்தனை அழகாக இருக்கிறார்கள். அதன் ரகசியம் என்ன..?

கேரளத்து பெண்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம்தான். அது மட்டுமின்றி அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்பு தான் காரணம்.

பொதுவாகவே கேரள பெண்கள் அழகுக்காக  கண்ட கண்ட க்ரீம்களைப் பயன் படுத்தமாட்டார்கள். எல்லாவற்றுக்கும் இயற்கைப் பொருட்களையே நாடுவார்கள். அத னால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று உள்ளது. 
கேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங் காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையி ல் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடி பட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.
 
கேரளத்து பெண்களின் சரும மென்மையாக இருப்பதற்கு, அவர்கள் மஞ்ச ள் பயன்படுத்துவதுதான். தினமும் குளிக்கும்போது மஞ்சளை உடல் முழு வதும் பூசிக் குளிப்பார்கள்.
 
முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10நிமிடம் ஊற வைப்பார் கள். இதனால் தான் அவர்களின் முகத்தி ல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது.
 
கேரளத்துபெண்களின் கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களின் கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத் துவார்கள். அதிலும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல்செய்து அதனைப்பயன்படுத்துவார்கள்.
 
மலையாள பெண்கள் கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது ஃபேஸ்பேக் போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணம்.
 
கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கிய மான ரகசியம் இது தான். அது என்னவெனில் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்கு பதிலாக, செம்ப ருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.
 
கேரளத்துபெண்கள் பொடுகுவராமல் இருப்பதற்கு, இரவி ல் படுக்கும்போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக்கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவர்.  இதுதான் இருப்பதிலேயே முக்கியமானது. கேரளத்து பெண்கள் தினமும் இரவில் படுக்கும் போது, சிவப்பு சந்தனக் கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையி ல் கழுவுவார்கள். இதனால்தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக உள்ளது.
 
மலையாள பெண்கள் ஷாம்புவிற்கு பதிலாக செம்பருத்தியைப்போல், சீகைக்காயை அரைத்து, அவற்றையும் பயன்படுத்துவார்கள். நல்ல உணவு, இயற்கை பொருட்களுடன் அழகு மற்றும் போதிய உறக்கம். இவைதான் கேரளப் பெண்களின் அழகு ரகசியம்.

அதனால், தேவையற்ற க்ரீம்களை ஒதுக்கித்தள்ளி இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி அழகாகுங்கள்.
 

Leave a Comment