சர்க்கரை நோய்க்கு வெள்ளை எமன்..?

Image

நீரிழிவு நோய் வந்துவிட்டாலே அரிசி சாதத்தை கண்ணால் பார்க்கக்கூடாது. வெள்ளை நிற உணவுகளை தள்ளிவையுங்கள் என்று சொல்கிறார்கள். மருத்துவரீதியில் இது சரிதானா..?

ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்து என்னவென்றால், ‘’சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க உணவு, உடற்பயிற்சி, தூக்கம், மருந்து ஆகியவை மிகவும் முக்கியம். வெள்ளை உணவுகள் என்றால் சர்க்கரை, மைதா, அரிசி, கிழங்கு போன்றவையே.

அரிசியை ஒப்பிடும் போது கோதுமையில் ஏராளமான தாதுக்கள் உள்ளன. ஆயினும் இரண்டிலுமே அதிக மாவு சத்துகள் உள்ளன. கோதுமையில் நிறைய நார்ச்சத்தும் புரதச்சத்து கொஞ்சமும் இருக்கிறது. சாதம் நிறைய சாப்பிட்டாலும் சீக்கிரமே பசி உணர்வு வந்துவிடும். ஏனென்றால் அரிசியில் உள்ள ஸ்டார்ச் எளிதில் ஜீரணமாகிவிடுகிறது. அரிசியில் கார்போஹைட்ரேட்கள் உள்ளன, நார்ச்சத்து இல்லை என்பதால் உடனே ஜீரணமாகிறது. எனவே உடல் எடை குறைப்போருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் சாதத்தை விட கோதுமை நல்லது.

சாதம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். சப்பாத்தியில் குறைந்த அளவே மாவுச் சத்து இருப்பதால் அதை சாப்பிட்டாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ஏறாமல் இருக்கிறது. மேலும் கோதுமையில் இருக்கும் சோடியம் ரத்தத்தைத் திரவமான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. அரிசியில் இந்த சோடியம் கிடையாது. அதேநேரம், அதிக எண்ணிக்கையில் சப்பாத்தி எடுத்துக்கொள்வதும் ஆபத்து’’ என்கிறார்கள்.

Leave a Comment