காத்திருக்கும் விளையாட்டு வீரர்கள்
விளையாட்டுத் துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கும் 3 சதவீத இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களிடையே பெரும் கொண்டாட்டமாகியுள்ளது.
இன்று உதயநிதி, ’’சர்வதேச – தேசிய – மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுகின்ற வீரர் – வீராங்கனையர் 100 பேருக்கு முதற்கட்டமாக , அரசுத்துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.
எனவே, இதற்கான பணி நியமன ஆணைகளை விரைந்து தயார் செய்வது தொடர்பான உயர் நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினோம். ஒவ்வொரு துறையிலும் – பொதுத்துறை நிறுவனங்களிலும் கண்டறியப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கு 3 % இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்திட அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
சொல்லிக்கிட்டே இருந்தால் எப்படி, சீக்கீரம் நடைமுறைக்குக் கொண்டுவாங்க. தேர்தல் வரை காத்திருக்க வேண்டுமா என்று விளையாட்டு வீரர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதேநேரம், இந்த இட ஒதுகீடு எங்கிருந்து எப்படி எடுக்கப்படும் என்பதற்கு தெளிவான வரையறை இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. அப்படியென்றால் அறிவிப்புடன் நின்றுவிடுமோ..?