கடவுள் எப்போ டென்ஷன் ஆவார்..?

Image

வாய் விட்டு சிரிங்கோ சார்

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி, “சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்… என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்…” என்று பாசத்துடன் அழைத்தது.

அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது… சிறிது தூரம் சென்றதும் ஒரு யானை உதட்டின் அடியில் ‘ஹான்ஸ்’ வைத்துக் கொண்டு நின்றது. அந்த யானையிடம் எலி, ” சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்…” என்று அழைத்தது. உடனே அந்த யானையும் ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது….

கொஞ்ச தூரம் சென்றதும் சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு இருப்பதை எலி பார்த்தது. உடனே சிங்கத்திடம், “மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்… இந்த காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா… என்னுடன் வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன்…” என்று சொல்லி முடித்ததும் எலியின் மண்டையில் நங் என்று ஒரு கொட்டு வைத்தது சிங்கம். எலி மயங்கி விழுந்தது.

உடனே சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும், “மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த நல்ல எண்ணம் கொண்ட எலியை அடித்தீர்கள்…?” என்று கேட்டன. அதற்கு சிங்கம், “இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி போன வாரம் என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான்… டெய்லி இவனுக்கு இதான் வேலையே…’’ என்றபடி குடிக்கத் தொடங்கியது.

……………………..

கடவுள் எப்போ டென்சன் ஆவார் தெரியுமா…?

கல்யாணம் பண்ணாமலே ஒரு பொண்ணு கர்ப்பம் ஆகிறதுண்டு. அதைக் கேட்டதும் அவங்க அம்மா ‘அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே”ன்னு சொல்வாங்க பாருங்க… அப்பத்தான் டென்சன் ஆவாராம்!!

………………….

ஒரு கன்னியாஸ்திரி மருத்துவரை சந்திக்க வந்தார். தொடர்ந்து விக்கல் வந்துகொண்டே இருக்கிறது, என்னால் எந்த வேலையும் பார்க்க முடியவில்லை என்று விக்கலுடனே சொன்னார்.

கன்னியாஸ்திரியை பரிசோதித்த டாக்டர், ‘’நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்…’’ என்றதும் அந்த கன்னியாஸ்திரி அழுதுகொண்டே வெளியே போய்விட்டார்.

கொஞ்சநேரத்தில் சர்ச்சில் இருந்து டாக்டருக்குப் போன் வந்தது. ‘’டாக்டர் சிஸ்டரிடம் என்ன சொன்னீர்கள்..?’’

‘’அவர் விக்கலை நிறுத்துவதற்கு அதிரச்சி வைத்தியம் தரவேண்டும் என்பதால் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னேன்… ஏன் என்னாச்சு..?’’

‘’சீக்கிரமாக வாருங்கள். சர்ச் ஃபாதரை அந்த சிஸ்டர் அடித்ததில் அவர் மண்டை உடைந்துவிட்டது’’ என்றார்கள்.

………………………………….

ஒரு துறவியிடம், ‘’ஞானம் வந்த பின் துறவியானீர்களா அல்லது துறவறம் வந்த பிறகு ஞானம் வந்ததா?’’ என்று ஒருவன் கேட்டான்.

அதற்கு அந்த துறவி, ‘’ஞானம் வந்த பிறகே நான் துறவி ஆனேன்..’’ என்றான்.

‘’அதெப்படி துறவறம் பூண்டு கடினமாக சிந்தனை செய்தால் தானே ஞானம் கிடைக்கும்’’ என்று கேட்டான்.

‘’ஞானம் என்பது என் மனைவியின் பெயர்’’ என்றார் துறவி.

………………………….

‘’பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும்… ஆனா செருப்பு தெரியணும்… அப்படி உங்களால எடுக்க முடியுமா? 100 ரூபாய் தெரியணும்”

“எடுத்திடலாம்…. ரூபாயைக் குடு… செருப்பை கழட்டி தலையில வச்சிட்டு சேர்ல உட்காரு’’

………………………….

ஒரு குடிகார கணவன் தலைவலியுடன் காலையில் எழுந்தான். அப்பொழுது தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது, அதிகம் குடித்ததால் தன் மனைவியுடன் சண்டை போட்டதும், அதனால் அவன் மனைவி அவன் கிட்ட சண்டை போட்டு கொண்டு வீட்டை விட்டு வெளியே போனதும் நினைத்து மிகவும் வருத்தப்பட்டான். அதற்கு காரணம் பீர் பாட்டில் தான் என்று முடிவு எடுத்தான்!

வீட்டில் அவன் குடித்த காலி பீர் பாட்டில் கிரேட் இருந்தது. அதை வெளியே எடுத்து சென்று ஒவ்வொரு காலி பாட்டிலாக எடுத்து, ‘’இனி நான் குடிக்க மாட்டேன்’’ என்று சொல்லி சுவற்றில் அடித்து உடைக்க ஆரம்பித்தான்.

ஒன்று, இரண்டு, மூன்று பாட்டில்களை உடைத்து விட்டான். நான்காவது பாட்டிலை எடுத்தான் உடைக்க முற்பட்ட நேரத்தில் தான் அது கொஞ்சம் வெயிட்டாக இருப்பதை உணர்ந்தான்.

அது, அவன் குடிக்காமல் விட்ட பீர் பாட்டில், ஒரு கணம் யோசித்தான்! அந்த ஃபுல் பீர் பாட்டிலிடம், ‘’ என் மனைவியுடன் நேற்று நடந்த சண்டைக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் நீ மட்டும் வீட்டுக்குள் போய் பத்திரமாக இரு’’ என்று சொல்லி அந்த பாட்டிலுடன் வீட்டுக்கு வந்துவிட்டான்.

Leave a Comment