காப்பாற்றத் துடிக்கும் பா.ஜ.க.
அரசுப் பள்ளியில் ஆன்மிகம் என்ற பெயரில் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களைப் பேசி சலசலப்பு ஏற்படுத்திய பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணுக்கு திருப்பூரில் அறக்கட்டளை மையம் உள்ளது. அவர் தலைமறைவாக இருக்கும் சூழலைல் அந்த அறக்கட்டளை மையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பள்ளியில் பேசிய மஹாவிஷ்ணு, ‘’ஒரு மந்திரத்தை படிச்சா நெருப்பு மழை வரும், ஒரு மந்திரத்தை படித்தால் உடல் நோய் குணமாகும், ஒரு மந்திரத்தை படிச்சீங்கீனா இங்கிருந்து அங்கு பறந்து போவீர்கள்” என்றெல்லாம் அறிவியலுக்குப் புறம்பாகப் பேசியதாலே ஆசிரியர் சங்கர் அதனை எதிர்த்து கேள்வி கேட்டார்.
இது குறித்துப் பேசும் ஆசிரியர் சங்கர், ‘’மேடையில் ஒட்டுமொத்த அறிவியல் சாராத விஷயங்கள் பேசியது மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியது என்னை காயப்படுத்தியது நடைமுறைக்கு ஒவ்வாத விசயங்களை பேசினார். அதை பேசக்கூடாது என்று தடுத்தேன். என் மதம் சாதியை தெரிந்து கொள்ள முற்பட்டார். கடைசிவரை நான் அதை வெளிபடுத்தவில்லை அவரது பேச்சு முற்றிலும் ஒரு மதம் சார்ந்து இருந்தது. மதம் சார்ந்து பேசக் கூடாது என்று தடுத்தேன் பள்ளி என்பது சமத்துவம் பேணுமிடம். மத அரசியல் கூடாது’ என்று சொன்னேன். தைரியமாக பேசியதற்கு அமைச்சர் என்னை பாராட்டினார்’’ என்கிறார் சங்கர். மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த விவகாரங்களுக்குப் பொறுப்பெடுத்து அன்பில் மகேஸை பதவியிலிருந்து தூக்க வேண்டும், மகாவிஷ்ணுவை கைது செய்ய வேண்டும் என்று உடன்பிறப்புகள் போராடி வருகிறார்கள்.
இதற்கு எதிர்த்து தெரிவித்திருக்கும் பா.ஜ.க.வை சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா, ‘’தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் X வலைதள பயன்பாட்டாளர்களுக்கு எனது கடுமையான கண்டனங்கள். ஒரு மாநில அமைச்சரையே இத்துனை தரக்குறைவாக பேசும், எழுதும் சமூக விரோதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? அவர் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால் திராவிடியன் ஸ்டாக்ஸ் உடனடியாக கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவுக்கோ அல்லது காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, தெலுங்கானா ஆகிய “திராவிட” மாநிலங்களுக்கு புலம் பெயரலாமே?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதாவது, மகாவிஷ்ணுவை இந்த விஷயத்தில் கைது செய்யக்கூடாது என்பதற்காக பா.ஜ.க. களம் இறங்குகிறது. அதனாலே பா.ஜ.க.வின் நாராயணன் திருப்பதி, ‘’மிகத் தெளிவாக, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் தான் இந்த நிகழ்ச்சி மற்றும் பேச்சு அமைந்திருந்தது என்றும் மத ரீதியான கருத்துக்கள் எதுவுமே சொல்லப்படவில்லை என்கிறார் தலைமை ஆசிரியை. ஆனால், யாரோ சிலரின் சமூக ஊடக பதிவுகளின் அடிப்படையில் பயந்து கொண்டு அமைச்சர் அன்பில்மகேஸ் அவசர கதியில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்திருப்பது நகைப்புக்குரியது மட்டுமல்ல, கண்டிக்கதக்கதும் கூட.
ஆன்மீகமும் அறிவியல் தான் என்பதை அறியாமல் பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து விரோத சிந்தனையை விதைக்கும் தீய சக்திகளுக்கு துணை போகிறது தமிழக அரசு. மாணவிகளின் தன்னம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் எடுக்கப்பட்ட தலைமை ஆசிரியையின் மீதான நடவடிக்கையை அரசு திரும்பப்பெற வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
அடேங்கப்பா அரசியலா இருக்குதே.