- கொந்தளிக்கும் பி.ஆர்.பாண்டியன்
மேகதாட்டு அன்னைக்கு மோடி ஸ்டாலின் அரசுகள் கூட்டு சேர்ந்து துணை போவதாக குற்றம் சாட்டி தஞ்சாவூர் கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி பேசிய பாண்டியன், ‘’காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணையை கட்டி தமிழ்நாட்டை அழிப்பதற்கு கர்நாடக அரசு நயவஞ்சக நடவடிக்கையின் சட்டவிரோதமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற ஆணைய 18 வது கூட்டத்தில் மேகதாட்டு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை விவாதிக்க கர்நாடகம் கோரிக்கை வைத்தது.தமிழ்நாட்ட அரசின் பிரதிநிதி அதனை மறுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளன? சுட்டிக்காட்டி தடுத்து நிறுத்தினர்.
அதே நேரத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகள் வரைவுத்திட்டறிக்கை ஆணையம் விவாதிக்க கூடாது என்று மறுப்பு தெரிவித்தால், அதனை மீண்டும் மத்திய அரசுக் அனுப்பி வைத்து கருத்து கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை ஏற்று ஆணையத் தலைவர் அனைத்து மாநிலங்களும் ஒத்த கருத்தோடு அணை கட்டுவது குறித்து மத்திய அரசுக்கு அனுமதி கோரி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறாமல் ஆதரவு தெரிவித்து தீர்மான நிறைவேற்ற துணை போயிருக்கிறது. இதன் மூலம் மோடி அரசும் ஸ்டாலின் அரசும் தமிழ்நாட்டிற்கு எதிராக காவிரி பிரச்சனையை மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு ஆதரவாக துணை போயிருக்கிறார்கள்.ஏற்கனவே கர்நாடக எதிராக தொடங்கப்பட்ட வழக்கையும் திமுக அரசு தான் திரும்பப்பெற்றது. விவசாயிகள் வழக்கு போட்டு பெற்ற உரிமையை மீண்டும் பறிகொடுக்க திமுக தலைமை நாட ஸ்டாலின் அரசு முன்வந்திருப்பதை கண்டித்துதான் இன்றைக்கு முற்றுகையிட உள்ளோம்.
காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக மதித்து தண்ணீரை திறக்கவில்லை. அது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் முன் வருவதில்லை.
காவிரியில் உபரி நீர் கடலில் கலப்பதை கர்நாடக அரசு குறிப்பிட்டு மேகதாட்டு அணைக்கட்டுமாணத்தை நியாயப்படுத்த முயற்சிக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் தனது ஆட்சி காலத்தில் 1963ல் தமிழ்நாடு எல்லையான கிருஷ்ணகிரி மாவட்ட வன எல்லையில் ராசிமணலில் புதிய அணைக்கட்டி 64 டிஎம்சி தண்ணீர் தேக்குவதற்கு திட்டம் தயாரித்து அதனை அடிக்கல் நாட்டி வைத்திருக்கிறார். அதற்கான அடிக்கல் ஒகேனக்கல் மின்சார வாரிய அலுவலக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அதனை கைவிட்டு விட்டது. இந்நிலையில் தற்போது மேகதாட்டு அணை கட்டி உபநீரை தடுக்கிறேன் என்று கர்நாடகா நியாயப்படுத்த முயற்சிப்பதை தடுத்து நிறுத்தி ராசிமணலில் அணைக்கட்டுவதற்கான கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் .இதற்கு மோடி அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.
பயிர் கருகுவதை பார்த்து கதறும் போது முதலமைச்சர் விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல முன் வராமல் கொடைக்கானல் கோடை வாசஸ்தலத்தில் ஓய்வெடுப்பது ஏற்கத்தக்கது அல்ல’’ என்று கொதித்தார்.