சிரிச்சா என்ன தப்பு
எத்தனை முறை படித்தாலும் சில நகைச்சுவைகள் வாய் விட்டு சிரிக்க வைக்கும், அப்படிப்பட்ட குட்டி ஜோக்ஸ் இங்கே. ஏற்கெனவே படித்தவை என்றாலும் மீண்டும் படியுங்கள், சிரியுங்கள்.
- தக்காளி சோறு பிரியாணி மாறி இருந்தா அது அம்மா சமையல். பிரியாணியே தக்காளி சோறு மாறி இருந்தா அது பொண்டாட்டி சமையல். சாப்பிட்ட ஒடனே வாந்தி வந்துச்சுன்னா அது லவ்வர் சமையல்.
- பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு ஒரு புது காலி பர்ஸ் கொடுப்பான் பாரு… அவன் தான் நகை கடைக்காரன்
- மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்… ஆம், அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா…
எவ்வளவு அதிகாரங்கள்.
- நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..
………………………….
மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.
கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது
………………………..
கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு முருகனைத்தான் ரொம்பப் பிடிக்கும் …..
அப்போ பின்னாடி…..?
அட, அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வமே இல்லைங்க.
…………
சத்தியவான் சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜாவிடமிருந்து தன் தந்திர வரங்களால் கடுமையாகப் போராடி மீட்டாள். இந்த கதையின் கருத்து என்ன தெரியுமா?
ஒரு புருஷன பொண்டாட்டிகிட்ட இருந்து, அந்த எமதர்மனால கூட காப்பாத்த முடியாது…..!!!
……………………………………….
மனைவி: உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலத்தான் அடிச்சுக்கோணும்…..!
கணவன்: செருப்பு இந்தா இருக்கு…..! புத்திக்கு எங்கே போவ!!??
………………………………