ஆச்சர்ய தகவல்கள்
தன்னை சந்திக்கும் வெளிநாட்டினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘தடம்’ என்ற பரிசுப் பெட்டகத்தை வழங்கிவருகிறார். அந்த தடம் பெட்டகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா..?
திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை) நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி சால் பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம் புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட் கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு.
தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான கைவினைப் பொருள்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ், நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சியாக இந்த ‘தடம்’ அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் பாரம்பரியமிக்க கைவினைப் பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கவும் இதற்கு ஆதரவளிக்கிறார் ஸ்டாலின்.
பழங்கால கைவினைப் பொருள்களை சமகால தமிழர் பண்பாட்டுடன் இணைப்பதன் மூலம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் அதேபோல் கைவினைக் கலைஞர்களை பன்னாட்டு சந்தைகளுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்ல இத்திட்டம் உதவுகிறது ’தடம்’ திட்டத்தின்கீழ் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மு.க. ஸ்டாலின் அவர்கள் தான் சந்திக்கும் விருந்தினர்களுக்கு தடம் பெட்டகத்தை அளித்து வருகிறார்.
பாராட்ட வேண்டிய நல்ல முயற்சி.