• Home
  • அரசியல்
  • ஆயிரம் டன் அரிசியை என்ன செய்தார் சீமான்..?

ஆயிரம் டன் அரிசியை என்ன செய்தார் சீமான்..?

Image

திருச்சி நிர்வாகி அதிர்ச்சிக் குற்றச்சாட்டு

எல்லோரும் சேர்ந்து வளர்த்த கட்சியை தன்னுடைய கட்சி என்று கூறிவருகிறார் சீமான். இந்தக் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு மரியாதை தருவதில்லை என்றெல்லாம் காரணம் காட்டி நாம் தமிழர் கட்சியிலிருந்து திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் சிலர் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சீமானின் நடவடிக்கைகள் சரியில்லாததால் வெளியேறுவதாகத் தெரிவித்திருக்கும் அவர்கள், ‘’இலங்கை பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்த போது அங்குள்ள தாய் தமிழ் உறவுகளுக்காக நாம் டம்ளர் தம்பிகள் தமிழ்நாடு முழுவதும் வசூலித்து ஆயிரம் டன் அரிசி,பருப்பு ,ரொட்டிகள், ரொக்கமாக பணம் எல்லாம் சேர்த்து சீமானிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் ஒரு பிடி அரிசி,ஒரு ரொட்டி துண்டு இலங்கை செல்ல வில்லை’ என்று ஒரு பகீர் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.

அந்த பொருட்கள் என்னவாயின என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரபு, ‘’நாம் தமிழர் கட்சியின் உதவி என்று கொடுத்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்’’ என்று கூறிவிட்டார். இது வசூல் செய்யும்போதே அவருக்குத் தெரியாதா..? அவர்கள் நாம் தமிழர் கட்சியிடம் இருந்து பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை என்றால் மாநில அரசு அல்லது மத்திய அரசிடம் ஒப்படைத்து இருக்கலாமே, அதை ஏன் செய்யவில்லை?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

மேலும் அவர்கள், ‘’ஆல் இன் ஆல் அழகுராஜா போல் செயல்பட்டு வருகிறார் சீமான். கட்சி அலுவலகத்தை தனிநபர் பாக்கியராஜன் பெயரில் பதிவிட்டது ஏன். திருச்சியில் நாம் தமிழருக்கு 1 லட்சம் உறுப்பினர் இருந்தனர். இவர்களில் 80 சதவீதம் பேர் இங்கு இல்லை. கட்சியில் எல்லாமேஎ நான் என்று செயல்படால் எங்கள் கொடுத்த உழைப்புக்கு என்ன மரியாதை? கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் என் உழைப்பு, வருமானத்தைக் கொடுத்தும் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. என் உழைப்பைச் சுரண்டிவிட்டு நீங்கள் மட்டும் சொகுசாக இருக்கிறீர்கள்..’’ என்று ஏகப்பட்ட கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு சீமான் குரூப் ஆட்கள் இன்னமும் பதிலடி கொடுக்கவில்லை என்பது தான் ஆச்சர்யம்.

Leave a Comment