• Home
  • சட்டம்
  • சொத்துப் பத்திரம் தொலைந்து போனால் என்ன செய்ய முடியும்..?

சொத்துப் பத்திரம் தொலைந்து போனால் என்ன செய்ய முடியும்..?

Image

வழக்கறிஞர் நிலா பதிலளிக்கிறார்

சொத்து பத்திரத்தை மிகவும் பத்திரமாக வைத்திருப்பார்கள். ஆனால், நீண்ட நாட்களாக அதை தேட வேண்டிய அவசியமே இருக்காது. அதனால் எங்கே வைத்தோம் என்பதை மறந்துவிடுவார்கள். பயணத்தில் சிலர் தொலைப்பது உண்டு. ஏதேனும் காரணத்துக்காக சிலரிடம் காட்டிவிட்டு, திரும்பக் கிடைக்காமல் போகலாம்.

இதுபோன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் நிலாவிடம் கேட்டோம். இதற்கு அவர், ’’முதலில் Bottom of Form

உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர். வாங்க வேண்டும். இதையடுத்து அவர்களிடமிருந்து ஆவணம் காணவில்லை என்று ஒரு படிவம் வாங்க முடியும்.

இதையடுத்து, சொத்தின் முழு விபரத்தைக் குறிப்பிட்டு, பத்திரம் தொலைந்து போன தகவல் குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். இதையடுத்து ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் யாராவது கண்டுபிடித்துத் தருகிறார்களா அல்லது ஆட்சேபனை தெரிவிக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும்.

இதையடுத்து பத்திரம் எப்படி தொலைந்தது என்பதை ஒரு பத்திரத்தில் எழுதி நோட்டரி பப்ளிக் சான்று பெற வேண்டும். இதையடுத்து சொத்து எங்கு பதியப்பட்டதோ அந்த சப் ரிஜிஸ்தரார் அலுவலகத்திற்குச் சென்று நகல் வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் கையில்

FIR பதிவு நகல், காவல் துறையினர் காணவில்லை என்று கொடுத்த சான்றிதழ், நாளிதழ் விளம்பரத்தின் பிரதி ஆகியவற்றுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, போன்றவை மற்றும் இசி எனப்படும் Encumbrance Certificate பட்டா பிரதி போன்றவை இணைத்து உரிய கட்டணம் கட்ட வேண்டும். அனைத்தும் சரியாக இருந்தால் விண்ணப்பம் செய்த ஒரு மாத காலத்திற்குள் நகல் பிரதியை பெற முடியும்.

இது போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு புதுயுகம் தொலைக்காட்சியில், சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சியில் விடை கிடைக்கிறது.

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு சட்டம் ஒரு வகுப்பறை என்ற நிகழ்ச்சியை யாழினியுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார் பிரபல வழக்கறிஞர் நிலா. பிரபல வழக்கறிஞர்கள் தினமும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்களின் சந்தேகம் தீர்க்கிறார்கள். போன் செய்தும் சந்தேகம் கேட்கலாம். சட்டத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்.

ஞானகுரு இணையத்திலும் உங்கள் கேள்விகளை அனுப்பிவையுங்கள். உங்கள் சந்தேகங்களை நிலா நிச்சயம் தீர்த்து வைப்பார்.

Leave a Comment