வழி காட்டுகிறார் வழக்கறிஞர் நிலா
விபத்துகள் எங்கேயும், எந்த நேரத்திலும் நடக்கலாம். அப்படி நடக்கும்போது உயிர் தப்புவதற்கும், அங்கிருந்து விலகிச் செல்லவுமே பலரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் பல்வேறு சட்டச் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற நேரத்தில் பின்பற்ற வேண்டிய சட்டரீதியான கடமைகள், உரிமைகள் குறித்து தகவல் கொடுக்கிறார் வழக்கறிஞர் நிலா.
சாலை, தொழிற்சாலை, அலுவலகம், வீடு என எங்கு வேண்டுமானாலும் விபத்து நடக்கலாம். எங்கு விபத்து நடந்தாலும் முதலில், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவியை அளிக்க வேண்டும். அருகிலுள்ள மருத்துவமனை அல்லது 108 மருத்துவ அவசர சேவையை அழைக்க வேண்டும் ஏனென்றால் உயிர் பாதுகாப்பு முக்கியம்.
அடுத்த கட்டமாக விபத்து ஏற்பட்ட இடத்திலுள்ள போலீஸ் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவசர போலீஸ் எண் 100 அழைத்து தகவல் சொன்னாலும் போதும். இது காவல் துறையினர் FIR (First Information Report) பதிவு செய்வதற்கு மிகவும் அவசியம். அப்படி போலீஸாரிடம் புகார் செய்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் நேரத்தில் அதன் நகல் பெற்றுக்கொள்ள வேண்டும். இது விபத்து குறித்த சட்ட நடவடிக்கையின் அடிப்படையாக இருக்கும்.
விபத்து ஏற்பட்ட இடத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்தல். சாட்சிகள் இருந்தால் அவர்களின் பெயர், தொடர்பு விவரங்களை பதிவு செய்தல். வாகன எண்கள், நேரம், இடம் போன்ற விவரங்களை குறித்துக் கொள்வது நல்லது. விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து காயமடைந்ததற்கான மருத்துவ அறிக்கைகள் (Medical certificate/MLC report) பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். இது நஷ்டஈடு மற்றும் இனி தொடரும் வழக்குகளுக்குப் பயன்படும்.
விபத்தில் ஒரு தரப்பு மோசமான குற்றங்களை (மது அருந்தி ஓட்டுதல், விதிமீறல்) செய்திருந்தால், IPC அல்லது மோட்டார் வாகன சட்டம் (Motor Vehicles Act) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். காயம் அல்லது மரணம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டோர் அல்லது குடும்பத்தினர், விபத்துக்குக் காரணமானவரிடம் நஷ்டஈடு கோரலாம். விபத்து நேரத்தில் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இருந்தால், Insurance Claim செய்ய முடியும். Work-related accident என்றால், Employees Compensation Act மற்றும் ESI Act பயன்படுத்த முடியும்.
விபத்து குறித்து நஷ்டஈடு கோருவது ஒரு சிவில் வழக்கு. இதில் காயம், மரணம், லாப இழப்பு போன்றவற்றுக்காக கோரலாம். மோசமான குற்றம் இருந்தால், கிரிமினல் வழக்கும் தொடரப்படும்.சட்ட ஆலோசனைக்காக ஒரு வழக்கறிஞரிடம் உடனே செல்லுவது பாதுகாப்பானது. நேரம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்குவது முக்கியம் என்கிறார் நிலா.
இது போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு புதுயுகம் தொலைக்காட்சியில், சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சியில் விடை கிடைக்கிறது.
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு சட்டம் ஒரு வகுப்பறை என்ற நிகழ்ச்சியை யாழினியுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார் பிரபல வழக்கறிஞர் நிலா. பிரபல வழக்கறிஞர்கள் தினமும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்களின் சந்தேகம் தீர்க்கிறார்கள். போன் செய்தும் சந்தேகம் கேட்கலாம். சட்டத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்.
ஞானகுரு இணையத்திலும் உங்கள் கேள்விகளை அனுப்பிவையுங்கள். உங்கள் சந்தேகங்களை நிலா நிச்சயம் தீர்த்து வைப்பார்.