• Home
  • அரசியல்
  • சிறப்பு மாநில அந்தஸ்துன்னா இவ்ளோ சலுகையா?

சிறப்பு மாநில அந்தஸ்துன்னா இவ்ளோ சலுகையா?

Image

சந்திரபாபு நாயுடு சாதிக்க முடியுமா?

மத்தியில் பா.ஜக. பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் சந்திரபாபு நாயுடுவிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அவர் நீண்ட காலமாகவே ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதுசரி, ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் என்ன நன்மை என்று தெரியுமா?

பொதுவாக வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பின்தங்கிய மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படுகிறது. ஒரு மாநிலம் புவியியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியிருந்தால், வரி விதிப்புகளில் சிறப்பு விலக்கு அளிக்கப்படும்.  

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க அரசியலமைப்பில் எந்த இடமும் இல்லை என்றாலும், கடந்த 1969 ஆம் ஆண்டு 5வது நிதிக் குழுவின் பரிந்துரையின் காரணமாக பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன்படி 1969 ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து சிறப்பு அந்தஸ்து பெற்றன.

அதன்பிறகு, இமாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

குறைந்த மக்கள்தொகை அல்லது அதிக பழங்குடி மக்கள் அல்லது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்க வேண்டும் அல்லது பொருளாதாரம், உள்கட்டமைப்பின் அடிப்படையில் பின்தங்கிய மாநிலமாக இருக்க வேண்டும். 

சிறப்புப் பிரிவு அந்தஸ்து பெறும் மாநிலத்திற்கு 90 சதவீத நிதியை மத்திய அரசு வளர்ச்சி திட்டங்களுக்காக வழங்குகிறது. அதுவே மற்ற மாநிலங்களுக்கு 60 சதவீதம் அல்லது 75 சதவீதம் மட்டுமே இருக்கும். மீதமுள்ள தொகையை மாநில அரசு தங்கள் கஜானாவில் இருந்து செலவு செய்ய வேண்டும். அதே போல சுங்க வரி, வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி உள்ளிட்ட முக்கியமான வரிகளில் இருந்து குறிப்பிடத்தக்க சலுகைகளைப் பெற முடியும். முக்கியமாக மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டில் 30 சதவீதம் சிறப்பு வகை மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகிறது.

நாயுடு சாதிப்பாரா என்பதைப் பார்க்கலாம்.

Leave a Comment