மீட்புப் பணி நெருங்கவே முடியாத வயநாடு பேரழிவு

Image

ஊட்டி, கொடைக்கானலுக்கு ஒரு பாடம்

வயநாடு நிலசரிவில் வரலாறு காணாத உயிர் சேதம் என்பது உறுதியாகிவருகிறது.  ஒரு சில இடத்துல மொத்தமா மண் மூடியிருப்பதால் மீட்பு பணிகள் ஆரம்பிக்கவோ, அருகில் நெருங்கவோ முடியவில்லை என்பதே உண்மை.

தன் உடைமைகளை, உறவுகளை இழந்து 5000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்… இராணுவப் படை தொடங்கி ரயில்வே மீட்புப் படை வரை அத்தனைப் படைகளும் கண் துஞ்சாது களத்தில் நிற்கின்றனர்.

மண்ணுக்குள் புதையுண்ட மாசற்ற உயிர்களை மோப்ப நோய் கொண்டு கண்டறிந்திடும் செய்தி நெஞ்சை உலுக்குகிறது.. 48 மணி நேரத்தில் தாய்த்திருநாட்டின் எழில்மிகு மாவட்டமான வயநாடு திசையற்று கிடக்கிறது… அம்மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களின் மனநிலையை மட்டுமல்ல; அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க காலங்கள் பல ஆகலாம்

நினைத்து பார்க்கவே முடியாத ஆபத்தில் வயநாடு. நமக்கும் இது ஒரு பாடம்.. நீலகிரி, வால்பாறை, ஊட்டி கொடைக்கானலில் கட்டுப்பாடற்ற காடழிப்புக்கும், கட்டுமானங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஊட்டி, கொடைக்கானலை மாநகராட்சியாக மாற்றும் முடிவையும் திமுக அரசு கைவிட வேண்டும்.

இப்போது ஊட்டி, கொடைக்கானலில் கண்மூடித்தனமான ரிசார்ட் கட்டுமானங்களால் பெரும் அபாயங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இவற்றை தடுத்து நிறுத்தி, நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து இப்போதே பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை.

Leave a Comment