• Home
  • அரசியல்
  • சரத்குமாரை விருதுநகர் மாரியம்மனும் ஏமாத்திடு்ச்சு

சரத்குமாரை விருதுநகர் மாரியம்மனும் ஏமாத்திடு்ச்சு

Image

மூன்றாம் இடத்தில் ராதிகா

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பார்க்க வேண்டும் என்று மாமியார் ஆசைப்பட்டதற்காக தமிழக அரசியலில் இருந்தவர் நடிகர் சரத்குமார். தனிக் கட்சியும் நடத்தி வந்தார்.

2024 தேர்தலில் நெல்லை தொகுதியில் நின்று ஜெயித்து மீண்டும் மோடி ஆட்சிக்கு வரும்போது அமைச்சராக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருக்கு நெல்லை தொகுதியில் ஓரளவு செல்வாக்கும் ஜாதி வாக்கும் இருக்கிறது. அதற்காகவே அப்படியொரு பிளான் போட்டார்.

அதற்காக நள்ளிரவு 2 மணிக்கு ராதிகாவை எழுப்பி தன்னுடைய கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் ஐக்கியமாகிவிட்டார். சரத்குமாரின் வருகையை அறிந்து உஷாரானார் நயினார் நாகேந்திரன். அவருக்கும் அமைச்சர் கனவு இருந்தது. ஆகவே, கையில் இருந்த எம்.எல்.ஏ. பதவியை தூக்கி எறிந்துவிட்டு கட்சி அறிவிக்கும் முன்பே தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார்.

நயினார் நாகேந்திரனை வாபஸ் வாங்கச் சொல்லும் அளவுக்கு அண்ணாமலைக்கும் பா.ஜ.க. மேலிடத்துக்கும் துணிச்சல் இல்லாத காரணத்தால் விருதுநகரில் சீட் கொடுக்க முன்வந்தார்கள். விருதுநகரில் நாடார் பெரும்பான்மை இல்லை என்பதால் தான் களத்தில் இறங்காமல் ராதிகாவை நிறுத்தி வைத்தார்.

விருதுநகர், சிவகாசியில் இருக்கும் நாடார் வாக்குகள வாங்கி எப்படியாவது ஜெயித்துவிடலாம் என்று திட்டம் போட்டார். இந்த நேரத்தில் தான் விருதுநகர் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது, அங்கு அங்கப்பிரதிஷ்டம் செய்வதாக வேண்டிக்கொண்டால் ராதிகாவுக்கு வெற்றி கிடைக்கும் என்று சிலர் சரத்குமாரிடம் சொல்லி வைத்தார்கள்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே மாரியம்மன் மீது நம்பிக்கை வைத்து அங்கப்பிரதிஷ்டம் செய்யுங்கள், அம்மனே வெற்றி பெற வைப்பார் என்றும் அடித்துச் சொன்னார்கள். அதை நம்பி சரத்குமாரும் ஞாயிற்றுக்கிழமை மாலை விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப் பிரதிஷ்டம் செய்தார். உடன் ராதிகாவும் கலந்துகொண்டார்.

ஆனால், என்ன செய்வது? இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ராதிகாவுக்கு மூன்றாவது இடமே கிடைத்திருக்கிறது.

மாமியார் மனசு வைத்தது போன்று மாரியம்மாள் மனசு வைக்கலியே.

Leave a Comment