விளையாட்டுத் துறை அமைச்சராகிறார் வினேஷ் போகத்..?

Image

காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்

90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடக்கவுள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை வென்றுள்ள பா.ஜ.க. மீண்டும் ஜெயிப்பதற்கு பல்வேறு வியூகங்கள் வகுத்துவருகிறது. அதேநேரம், இந்த முறை காங்கிரஸ் கட்சி தீவிரமாக களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சியில் வினேஷ் போகத் இணைந்திருப்பது மாபெரும் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சட்டமன்றத் தேர்தல் கடந்த தேர்தல்களைப் போல் அல்லாமல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் பாஜகவுக்கு கடுமையான போட்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் இங்கு 55 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  பாஜக முதற்கட்டமாக 67 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. லாட்வா தொகுதியில் முதல்வர் நயாப் சிங் சைனி போட்டியிடுகிறார். ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள ஒன்பது பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்த சக்தி ராணி சர்மாவுக்கு கால்கா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்துள்ள வினேஷ் போகத் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியின் இணைந்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் சந்தித்து அதிகாரபூர்வமாக தங்களை இணைத்துக் கொண்டனர். அதனால் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கிடைத்துள்ளது. தேர்தலில் வென்றால் வினேஷ் போகத்திற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ஹரியானா தேர்தல் ரொம்பவே ஹாட் ஆகியிருக்கிறது.

Leave a Comment