அரசியல் அழுத்தம் காரணமா?
நீங்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலும் உங்களை தகுதி நீக்கம் செய்தாலும் நீங்களே வெற்றி பெற்றவர் என்று வினேஷ் போகத்திற்கு இந்திய மக்கள் அனைவரும் ஆறுதல் கூறி வருகிறார்கள். தங்கம் வென்று பிரதமரை நேரில் சந்தித்து புகார் கூறுவார் என்று பலரும் கூறிவந்த நேரத்தில், இந்த தகுதி நீக்கம் நடைபெற்றுள்ளது. ஆகவே, இதன் பின்னே ஏதேனும் அரசியல் இருக்கிறதா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.
காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்த வினேஷ் போகத் இன்றைய போட்டியில் தங்கம் வெல்வார் என்று கருதப்பட்டது.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் இருந்தார். இறுதி போட்டியில் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதி போட்டிற்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடைபிரிவில் கலந்து கொண்ட வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக ஒலிம்பிக்கில் இருந்து அவர் தகுதி செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எடை ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் பரிசோதனை செய்யப்படுகிறது. போட்டிக்குப் போகும் நேரத்தில் செய்த பரிசோதனை அதன் பிறகு எப்படி மாறியது, இதில் ஏதேனும் சதி இருக்கிறதா என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதிக எடை என்று கணக்கு காட்டப்படுவதால் அவருக்கு எந்த பதக்கமும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.
நேற்று ஒரே நாளில் 3 போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் இறுதி போட்டிக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் மூன்று முறை ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட அனுபவசாலி, 52 எடை பிரிவில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்ட போது எடையை குறைத்து இலக்கை நோக்கி நகர்ந்தவர் ஒரே இரவில் எடை கூடிவிட்டது அதுவும் 100 கிராம் அதிக எடை அதிகம் என கூறி தகுதி நீக்கம் செய்வதை, இதன் பின்னணியை புரிந்து கொள்ளவே முடியவில்லை? எல்லாமே அரசியல் என்கிறார்கள்.