தலைகீழாகும் அரசியல் கணக்கு
ஆளும் தி.மு.க.வை கடுமையாகவும் மத்திய அரசை மென்மையாகவும் நடிகர் விஜய் தட்டிக் கேட்டார். முந்திய அ.தி.முக. குறித்து எதுவும் பேசவில்லை. அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆரைப் பாராட்டியிருந்தார். இதையடுத்து விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவிக்கவே, அவரது கட்சியினர் எடப்பாடிக்கு ஃப்யர் விடுகிறார்கள்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அண்ணா தி.மு.க. சிறப்பா செயல்படுகிறதுன்னு விஜய்க்குத் தெரியும். விஜய்யுடன் கூட்டணி அமைப்பது என்பது அந்த சூழ்நிலையில் அமைவது. முதல் முதலாக ஒரு மாநாடு விஜய் நடத்தியுள்ளார். மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் விஜய் பேசுகிறார். அதை எடுத்தவுடன் விமர்சிக்க விரும்பவில்லை.
எம்ஜிஆர் ஒரு தலைவராக எப்படி வாழவேண்டும் என வாழ்ந்து காட்டியுள்ளார். அதை குறிப்பிட்டு பேசுவதில் என்ன தவறு. ’மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் விஜய் பேசுகிறார். அதிமுக சிறப்பாக செயல்படுவதால் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை’’ என்று நேரடியாகவே புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
இதையடுத்து விஜய் கட்சியினர், எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் முதிர்ச்சியான அரசியல்வாதி. ரொம்பத் தெளிவா அரசியல் பேசுகிறார் என்று அவருக்கு ஃப்யர் விடுகிறார்கள். இதற்கு தி.மு.க.வினர், ‘டேய் உங்க தலைவரை ஓட ஓட விரட்டுனது அவங்க தான். தலைவா படத்திலிருந்து சர்கார் வரை நாங்க தான் காப்பாத்தியிருக்கிறோம். வரலாறு தெரியாமப் பேசாதீங்கடா…’’ என்று போட்டு வருகிறார்கள்.
எடப்பாடி நல்லாட்சி குடுத்திருக்கிறதா எடப்பாடியே சொல்லியிருப்பது தான் இப்போ செம டிரெண்டிங்.