• Home
  • அரசியல்
  • விஜய்க்கு நாளை முதல் அக்னிப் பரீட்சை..?

விஜய்க்கு நாளை முதல் அக்னிப் பரீட்சை..?

Image

பாஸ் ஆவாரா..?

விஜய் மாநாட்டுக்கு காவல் துறை தொடர்ந்து இடையூறு செய்துவருவதாக செய்திகள் வரும் அடிப்படையில், மாநாட்டுப் பந்தலுக்கும் விஜய்க்கும் பாதுகாப்பு அளிப்பது தவிர, வேறு எந்தப் பணியிலும் ஈடுபடப் போவதில்லை என்று காவல் துறை அமைதியாக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் சொல்கிறார்கள். மேலும், பாதுகாப்பு பொறுப்பை தாங்களே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாடு குறித்துப் பேசும் அரசியல் ஆய்வாளர்கள், ’’சினிமா ரசிகர்கள் மனநிலையும் அரசியக் கட்சி தொண்டர்களின் மனநிலையும் வித்தியாசமானது. சினிமா ரசிகர்கள் என்றாலே கூட்டம் கூட்டமாக வருவார்கள். இந்த கூட்ட மனப்பான்மையால் எக்கச்சக்க தப்புகள் நடபதற்கு வாய்ப்பு உண்டு.

நாளை நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக அறியப்படுகிறது. அப்படியாக ரசிகர்கள் ஒன்றுகூடும் பட்சத்தில் அதை சமாளிப்பது கட்சியின் நிர்வாகிகளுக்கு கடும் சவாலாக இருக்கும். ஏனென்றால், இவர்களிடம் எந்தக் கட்டுப்பாட்டையும் எதிர்பார்க்க முடியாது. சினிமா தியேட்டரில் கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் மனநிலையிலே நாளை மாநாட்டுக்கும் வருவார்கள்.

இளங்கன்று பயமறியாது என்பார்கள். அப்ப்டித்தான், முண்டியடிப்பார்கள். இவர்கள் என்ன தவறு செய்தாலும் அது கட்சிக்குத் தான் கெட்ட பெயரை உண்டாக்கும். நடக்கும் எல்லா காட்சிகளையும் படமாக்குவதற்கு மீடியாக்கள் கண் கொத்திப் பாம்பாக காத்திருக்கும். எனவே விஜய் மிகவும் எச்சரிக்கையுடன் இதை அணுகவில்லை என்றால் முதல் மாநாடே கடைசி மாநாடாக மாறிவிடும்’’ என்று சொல்கிறார்கள்.

ஆனால், கட்சி நிர்வாகிகளோ, ’10 லட்சம் வந்தாலும் சமாளிப்போம்’ என்கிறார்கள். நாளை தெரிந்துவிடும்.

Leave a Comment