அடேங்கப்பா ஆச்சர்யத் தகவல்கள்

Image

தகவல் களஞ்சியம் 3

எறும்புகளுக்கு காது கிடையாதா..?

ஒழுக்கத்துக்கும் கூட்டு வாழ்க்கைக்கும் உதாரணமாகத் திகழ்பவை எறும்புகள்.  ஆம், அத்தகைய எறும்புகள் நம்மைவிட அளவில் கிட்டத்தட்ட 10,000 மடங்கு சிறியவை. எறும்புகள் தனது எடையைவிட 20 முதல் 50 மடங்கு வரை அதிகமான எடையை தூக்கவல்லன. சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள் வரை உயிர்வாழும். பிரிட்டானியா ஆய்வுப்படி கறுப்புப் பெண் எறும்பு, சுமார் 15 ஆண்டுகள்வரை உயிர் வாழும் என அறியப்பட்டது. எறும்புகளுக்கு காதுகள் கிடையாது. நடக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை வைத்தே உணருகின்றன. எறும்புகள் எப்போதும் தனித்து வாழாது. கூட்டம் கூட்டமாகவே வாழும். இக்கூட்டத்தை  ‘காலனி’ என்பார்கள். 2002-ம் ஆண்டில் பில்லியன் கணக்கான எறும்புகளைக்கொண்ட சுமார் 5,800 கிலோ மீட்டர் நீளமுடைய எறும்புகளின் காலனி, இத்தாலி – ஸ்பெயின் எல்லையில் கண்டறியப்பட்டது.

மருந்தில்லாத சிகிச்சை
மருத்துவத்தில் தற்போது பிரபலமாகிவரும் ஒன்று,  ரெய்கி மருத்துவம். இது, மருந்து மாத்திரைகள் ஏதுமின்றிச் செய்யப்படும் தொடு சிகிச்சை ஆகும். இதன் தாயகம் ஜப்பானாகும். 18-ஆம் நூற்றாண்டில் மகா குரு மிக்காயூசுயி என்பவர் மூலம் ரெய்கி மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது. ரெய்கி என்பதில், ’ரெய்’ என்கிற ஜப்பானிய சொல்லுக்கு  ‘பிரபஞ்சம்’ என்று பொருள். ‘கி’ என்றால் சக்தி. ரெய்கி என்பது பிரபஞ்ச சக்தியால் குணப்படுத்துதல் ஆகும். நம்மைக் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்திதான் மின்காந்த அலை. அதை முறையாகப் பயன்படுத்தி நோயைக் குணப்படுத்துவதே ரெய்கி முறையாகும். இது எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்து மாத்திரைகள் ஏதுமில்லாத சிகிச்சை முறை ஆகும்.


ஒரு மரத்தில் எத்தனை பென்சில்கள்?
பென்சிலைப் பயன்படுத்தாத மனிதர்களே இருக்க முடியாது. சிறந்த ஆங்கில எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைப் பென்சிலை வைத்துத்தான் எழுதியிருக்கிறார்கள். ஒரு பென்சிலை வைத்து 45,000 வார்த்தைகள் எழுதலாம், 35 மைல் நீளமான கோடு போடலாம். நாம் எழுதப் பயன்படுத்தும் பென்சில்களில் கிராஃபைட், களிமண்ணின் கலவைதான் பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக ஒரு மரத்தின் அளவைப் பொறுத்து, 1,70,000 – 3,00,000 பென்சில்கள் வரை தயாரிக்கலாம். கின்னஸ் சாதனையின்படி, உலகின் மிக நீளமான பென்சிலின் அளவு, 1091.99 மீட்டர். பென்சிலின் மேல்பகுதியில் எச்பி (HB), 2 எச்பி (2HB) மற்றும் 2எச் (2H) எனப் போட்டிருக்கும். H என்றால் ஹார்டு (Hard), என்றும் B என்றால் பிளாக் (Black) என்றும் அர்த்தம்.

மூளைக்கு வலிக்குமா?
மனிதன் எல்லா செயல்களையும்  மூளையைக் கொண்டுதான் செயல்படுகிறான்.  ஆனால், அப்படிப்பட்ட மூளைக்கு வலி தெரியாது. ஏனென்றால் வலியை உணரும் வலி வாங்கிகள் இல்லை.  எந்த ஒரு விஷயத்தையும் சரியாக பார்க்க மூளை உதவுகிறது. நமது கண்கள் நிஜத்தில் ஒரு பொருளை தலைகீழாகத்தான் பதிவுசெய்கின்றன. ஆனால், மூளைதான் அதை சீராக்கி நமக்கு உதவுகிறது. 25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது மூளை. அதாவது ஒரு மின்விளக்கை எரியவைக்கும் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளையே தரமுடியும். மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் ஒரு லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் என்கிறார்கள். இந்த நரம்பு இழைகள் உந்துவிசைகளை நமது உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள அணுக்களுக்கு அனுப்ப உதவுகின்றன.

 20 வயதை அடையும்போது உடலின் பெரும்பகுதியான உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்றன. ஆனால் மூளை வித்தியாசமானது. நமது 40 வயதாகும்வரை மூளையின் வளர்ச்சி நிற்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்பினால் நமது மூளை அதை எப்போதும் ஏற்றுக் கொள்ளும்.  நாம் எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விஷயங்களை சிந்திக்கிறோம். ஒரு தகவல் நமது மூளைக்குள் மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நமது மூளை எப்போதும் ஒய்வெடுக்காது. நாம் விழித்திருக்கும்போது செயல்படுவதைக் காட்டிலும் உறங்கும்போது கூடுதலாக செயல்படும். நமது உடலின் மொத்த எடையில் மூளை 2 சதவீதம்தான் இருக்கும். ஆனால், நமது மொத்த சக்தியில் 25 சதவீதத்தை அது பயன்படுத்துகிறது. கர்ப்பகாலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். அந்த பெண்ணின் மூளை அவள் குழந்தையை பிரசவித்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இயல்பான அளவுக்கு திரும்பும். நமது வாழ்நாளில் நமது மூளை சேமிக்கும் தகவல்கள் எவ்வளவு தெரியுமா? ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகள் என்கிறார்கள்.

கண்ணுக்குள் இத்தனை ரகசியமா?

நம் பார்வை விசாலமானது என்று சொல்லக்  கேள்விப்பட்டிருக்கிறோம். அது, எந்த அளவுக்கு உண்மை என்று இதைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம். கடற்கரையில் நாம் நின்றுகொண்டு பார்க்கும்போது,கடலும் வானமும் சேர்கின்றது அல்லவா? அதன் அளவு 2.5 மைல்கள் தூரம் கொண்டது. நாம் உயரத்திற்குப் போகப்போக இன்னும் தொலைவில் பார்க்கலாம். காரணம், பூமி உருண்டையாக இருப்பதால். 20 அடி உயரத்திலிருந்து நம்மால் பார்க்கக்கூடிய தூரம் 6 மைல்கள். 300 அடி உயரத்திலிருந்து நம்மால் பார்க்கக் கூடிய தூரம் 23 மைல்கள். 350 அடி உயரத்திலிருந்து நம்மால் பார்க்கக்கூடிய தூரம் 80 மைல்கள். 16.000 (விமானம்) உயரத்திலிருந்து நம்மால் பார்க்கக்கூடிய தூரம் 165 மைல்கள். இதுவே இப்படி என்றால் நாம் கொஞ்சம் அண்ணார்ந்து பார்த்தால் அதன் கதையே வேறு. சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மைல் தொலைவில் உள்ள சந்திரனைப் பார்க்க முடியும்! அது மாத்திரமா? அதோ அந்த நட்சத்திரம்? அது கோடிக்கணக்கான மைல் தொலைவில் இருக்கின்றது, அதையும் நாம் பார்க்கின்றோம். அதற்குக் காரணம், நம் பார்வையின் சக்தி, நாம் பார்க்கின்ற பொருளில் இருந்து வரும் ஒளியைப் பொருத்தது. பொருட்களுக்கும் நம் கண்களுக்கும் இடையில் இருக்கும் மீடியமும் முக்கியம். ஐரோப்பாவில் சில நாடுகளில் பனிப் படலம் சூழ்ந்துகொள்ளும்போது, பகல் பன்னிரண்டு மணிக்கு நாம் பிடிக்கும் சிகரட் முனையே நம் கண்களுக்குத் தெரியாது.

Leave a Comment