போட்டுத் தாக்கிய ராகுல் காந்தி
உலகமெங்கும் இந்தியாவின் புகழை நரேந்திரமோடி உயர்த்திவருகிறார் என்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து செய்தி பரப்பிவரும் நேரத்தில், உண்மையான வளர்ச்சி யாருக்குப் போய்ச் சேர்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
அவர் இன்று பேசுகையில், ‘’மோடிஜியின் வளர்ந்த இந்தியாவின் உண்மை: உங்கள் கடின உழைப்பு, யாருக்கான லாபம்? நாட்டின் பொருளாதாரம் உங்கள் அனைவரின் வியர்வை மற்றும் இரத்தத்தால் இயங்குகிறது. ஆனால், அதில் உங்களுக்கு நியாயமான பங்கு கிடைக்கிறதா? சற்று யோசித்துப் பாருங்கள்: – பொருளாதாரத்தில், உற்பத்தித் துறையின் பங்கு 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, மக்கள் வேலைவாய்ப்பைக்காக போராடி வருகின்றனர். – விவசாயத் துறையில், தவறான கொள்கைகளால், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நிலைமை மோசமாகியுள்ளன.
வாழ்க்கையைச் சமாளிக்கவே அவர்களால் முடியவில்லை. – தொழிலாளர்களின் உண்மையான வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளில் தேக்க நிலையில் உள்ளது அல்லது குறைந்துள்ளது. – தீங்கு விளைவிக்கும் GST மற்றும் வருமான வரிச்சுமை, ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையைத் துயரமாக்கியுள்ளது, அதே நேரத்தில், பெருநிறுவனங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
உயர்ந்து வரும் பணவீக்கத்தால், இப்போது ஏழைகள் மட்டுமல்ல, சம்பளம் வாங்கும் வர்க்கமும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய, கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உண்மையான வளர்ச்சி என்பது அனைவரும் செழிக்கும் இடம்தான் – வணிகத்திற்கான நியாயமான சூழல், நியாயமான வரி முறை மற்றும் தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்க வேண்டும்.’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதற்கு பதில் சொல்வார்களா அல்லது பப்பு என்று விமர்சனம் செய்வார்களா..?