பட்டியலின வாக்கு மோதல்
திருமாவளவனையும் விடுதலைச் சிறுத்தைகளையும் தமிழ்நாடு அரசியலிலிருந்து குறிப்பாக தி.மு.க. கூட்டணியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான முயற்சியாக பா.ரஞ்சித் போராட்டத்தை முன்னெடுப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள்.
இதுகுறித்துப் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ‘வட தமிழகத்தில் செல்வாக்குடன் இருக்கும் திருமாவுக்கு எதிரான ஒரு தலைவராக முயற்சிக்கிறார் ரஞ்சித் முதலில் இதை அரசியல்கொலை என்று வாய் கிழிய கத்துகிறார் ஆர்ம்ஸ்ட்ராங் கின் கட்ட பஞ்சாயத்து கொலை கொள்ளை பின்புலம் கொண்ட வாழ்க்கையை பார்க்க மறுக்கிறார் இவரால் முடிந்தால் இந்த கொலைக்கான சரியான காரணத்தை வெளி கொண்டு வரட்டும்
மக்கள் முட்டாள்கள் இல்லை. இன்று விசிக உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல் தங்களுடைய பானை சின்று எளிதாக மக்களவை தொகுதிகளிலும் சட்ட மன்ற தோகுதிகளிலும் நின்று வெற்றிபெறும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார் அண்ணன் திருமாவளவன் அவர்கள். தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் அவரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்த முதல் அரசியல் கட்சித் தலைவர் அவர். பல்வேறு பிரச்சனைகளிலும் அவர் ஜாதி பார்த்து செயல்படவில்லை.அனைத்து தரப்பு மக்களுக்காகவும் குரல்கொடுத்துக்கொண்டே தன்னை நம்பிய மக்களுக்காகவும் அரசியல் அதிகாரத்தை பெற்றுத்தருகிறார். அண்ணன் திருமாவளவன் அவர்களுடைய வாழ்நாள் உழைப்பை வீணாக்கி, இளைஞர்களிடம் ஜாதிய உணர்வைத் தூண்டி தனிமைப்படுத்தி சங்கிகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க நினைக்கிறார் இயக்குநர் ரஞ்சித். அவர் அரசியல் புரிதல் இல்லாமல் செயல்படுகிறார் என்று நினைத்தே அவர் மீது கடுமையான விமர்சனம் இல்லாமல் பலரும் கடந்து செல்கிறார்கள்
தலித் கொலையானால் தலித் அமைச்சர்கள் மேயர்கள்தான் குரல் கொடுக்க வேண்டுமா? என்ன கேவலமான புத்தி இது? அதுவும், குரல் கொடுக்க இது என்ன ஆணவக் கொலையா, நீட் பிரச்சினையா, சாதி வன்முறையா? இது ‘ரவுடிப்பயல்கள்’ சம்பந்தப்பட்ட ஒரு குற்றச்செயல். அமைச்சர் சேகர் பாபு நேரில் வந்தார். கூடவே இருந்தார். முதல்வரும் சந்தித்து ஆறுதல் சொன்னார். வாக்கு கொடுத்தார்.
உங்கள் யானைக் கட்சியின் கள்ள தோஸ்து கட்சியான பாஜக உயர் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கைதாகிறார்கள். பாஜகவின் கள்ள தோஸ்து கட்சியான அதிமுக கவுன்சிலர் கூட கைகாகியுள்ளார். பல உண்மைகள் வெளிவருகின்றன. கட்சிப் பாரபட்சம் பார்க்காமல் கைதுகள் நடக்கின்றன. கொலையாளிகளின் ஃபோன்களை இன்று போலீஸ் கண்டு பிடித்திருக்கிறார்கள். உங்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? போலீஸுக்கே தெரியாத எதுவும் உங்களுக்குத் தெரிந்தால் போலீஸிடம் சொல்லுங்கள். ஏன் மேடை மேடையாக உளறிக் கொண்டிருக்கிறீர்கள்.
முதல்வரே நேரில் வந்த பின்பும், மேயர் பிரியா, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெயரை எல்லாம் இழுப்பது உங்கள் குறுகலான அரசியல் சுயநலத்தையே காட்டுகிறது. ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் உங்களுக்கு வேதனையை விட ‘இலக்குகளே’ மேலோங்கி உள்ளன. ஆர்ம்ஸ்ட்ராங்க் விஷயத்தில் கருத்து சொல்வது பா.ரஞ்சித்தா ‘கவுண்டம்பாளையம்’ ரஞ்சித்தா என்று நாங்கள் குழம்பும் அளவுக்குதான் உங்கள் கருத்துகள் உள்ளன’’ என்று கொதிக்கிறார்கள்.