அண்ணாமலைக்கு ஆகஸ்ட் டிக்கெட் ரெடி.

Image

அடுத்த தலைவர் இவர் தானா..?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு நிச்சயம் 10 தொகுதிகள் கிடைக்கும் என்று உறுதியளித்து தனித்து நின்று தேர்தலை சந்தித்தார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. சில தொகுதிகளில் டெபாசிட் வாங்கியது மட்டுமே நடந்தது. எனவே, தலைவர் பதவியை விட்டு விலக வேண்டிய சூழலுக்கு ஆளானார்.

நேரடியாக பதவி விலகினால் அவமானமாக இருக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் உண்டாகும் என்பதால் லண்டனுக்குச் சென்று அரசியல் படிக்கப் போவதாக கட்சி மேலிடத்துக்குக் கடிதம் எழுதினார். அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அனுமதி கிடைத்துவிட்டதாகத் தெரிய வந்துள்ளது. ஆகவே, ஆகஸ்ட் மாதம் அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து வெளியேறுகிறார்.

6 மாத படிப்பு என்று அண்ணாமலை கிளம்பினாலும் மீண்டும் அவர் தமிழகம் பக்கம் வர மாட்டார் என்கிறார்கள். படித்து முடித்து திரும்பிவரும் போது வேறு கட்சிப்பதவி கொடுக்கப்படும் என்றே தெரிகிறது.

ஆக, இப்போது அடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யார் என்பது தான் போட்டியாக இருக்கிறது. நயினார் நாகேந்திரன் கடுமையாக மோதிக்கொண்டு இருக்கிறார். இந்த பதவி கிடைக்கவில்லை என்றால் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்துவிடுவதாக மேலிடத்துக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்.

தமிழிசை செளந்தர்ராஜன், வாந்தி சீனிவாசன் ஆகியோருடன் சமீபத்தில் கட்சியில் இணைந்த சரத்குமாரும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். ஆனால், இப்போதைக்கு நயினார் நாகேந்திரனுக்கே பதவி கிடைக்கும் என்கிறார்கள். அவர் மூலம் ஏராளமான அ.தி.மு.க. பிரமுகர்களை உள்ளே இழுக்க முடியும் என்று கணக்குப் போடுகிறார்கள்.

அதேநேரம் மீண்டும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும் என்பதாலும் நயினார் நாகேந்திரனுக்கே அதிக வாய்ப்பு என்கிறார்கள். தமிழிசை செளந்தர்ராஜனுக்கு மீண்டும் கவர்னர் பதவி அல்லது அதற்கு இணையான வேறு ஏதேனும் ஒரு பதவி கிடைக்கும் என்கிறார்கள்.

Leave a Comment