என்ன செய்தார் சைதை துரைசாமி – 366
மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட சிங்கப்பூர் பயணம் காரணமாக கூவம் நதிக்கு ஒரு விமோசனம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். சென்னை மக்களுக்குத் தீராத தலைவலியான கூவத்தை சீரமைப்பு செய்வதற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
கூவம் சீரமைப்புக்குத் திட்டம் என்றதும் ஆளும் கட்சியினர் தொடங்கி எதிர்க் கட்சி வரையிலும் கிண்டல் செய்தார்கள். வழக்கம் போல் பணம் வீனாகப் போய்விடும் என்றே பேசிக்கொண்டார்கள். ஆனால், கூவம் சீரமைப்புக்கு என்று மூன்று கட்டங்களாகத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக மேயர் சைதை துரைசாமி அறிவித்ததும், அத்தனை பேரும் ஆச்சர்யத்தில் அசந்தே போனார்கள்.
2014ம் ஆண்டு இறுதி விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி 1934.84 கோடியில் புனரமைப்பு பணி மேற்கொள்வதற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி மூன்று ஆண்டுகளுக்குள் முடியக்கூடிய குறுகிய காலப் பணிகள், 12 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் இடைக்காலப் பணிகள் மற்றும் 25 ஆண்டுகளில் முடியக்கூடிய நீண்ட கால பணிகள் என மூன்று கட்டங்களாகப் பணிகள் பிரிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கூவம் நதி மறு சீரமைப்பு பணி மேற்கொள்ள பருத்திப்பட்டு முதல் நேப்பியர் பாலம் முகத்துவாரம் வரை 20 கி.மீக்கு 7 துறைகளுக்கு பணிகள் பிரித்து அளிக்கப்பட்டது.
குறுகிய கால பணிகள் : 60 ஒப்பப் பணிகள் ரூ.1453.76 கோடி
இடைக்கால பணிகள் : 7 ஒப்பப் பணிகள் ரூ. 247.19 கோடி
நீண்ட கால பணிகள் : 2 ஒப்பப் பணிகள் ரூ. 2.45 கோடி
மொத்தப் பணித்தொகை: 69 பணிகளுக்கு ரூ.1703.40 கோடிக்கு மற்றும் இதர செலவு, மேற்பார்வை செலவு, விலை உயர்வு ஆகியவைக்கு ரூ.231.44 கோடியும் சேர்த்து மொத்த தொகை ரூ.1934.84 கோடிக்கு மேற்கொள்ள தமிழ் நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ஆணை பிறப்பித்தது.
- நாளை பார்க்கலாம்.