• Home
  • யாக்கை
  • பக்கவாதத்திற்கு அந்த மூன்று மணி நேரம்

பக்கவாதத்திற்கு அந்த மூன்று மணி நேரம்

Image

மருத்துவ எச்சரிக்கை

மூளையின் ஒரு பக்கம் ரத்த ஓட்டம் குறைவதால் உடலின் ஒரு பகுதி செயலற்றுப் போகும் நிலையே பக்கவாதம். பொதுவாகவே உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளையும் இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளையும் கட்டுப்படுத்துகின்றன. அந்த வகையில் மூளையின் வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கப்படுகின்றது. 

முதல் கட்ட அறிகுறியாக  கைகள், கால்கள் மற்றும் முகத்தில் உணர்வற்ற நிலை உருவாகும். அதேபோல் ஒருவர் பேசுவது அல்லது பேச்சைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருப்பதும் முக்கிய அறிகுறிகள். சிந்தனை செய்ய முடியாத நிலை, உரையாடலின் நடுவில் குழப்பமடையும் தன்மை போன்றவை எல்லாம் அசட்டை செய்யப்படுகிறது.  

ஒன்று அல்லது இரண்டு கண்களில் பார்வைக் குழப்பம், பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வையும் பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகள். அதேபோல் கடுமையான தலைவலியும் ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கிறது.  

நடந்து செல்லும் போது  தள்ளாடுவது, நேராக நிற்க முடியாத நிலைமை, ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது போன்ற அறிகுறிகள், திடீரென சில நொடிகள் பேச்சு நின்றுபோகும் நிலை, நடந்து செல்லும்போது தலைசுற்றும் உணர்வு, உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும்போது கை தடுமாறுதல், கையெழுத்துப் போடும்போது கை தடுமாறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பக்கவாதம் தீவிர நிலையில் இருக்கின்றது என அர்த்தம். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்ட மூன்று மணி நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால் பக்கவாதம் தீவிரமடையாமல் தடுத்துவிட முடியும்.

Leave a Comment