குப்பை வளாகத்தில் முழுமையான ஆய்வு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 302

மக்கள் குரலுக்கு மதிப்பளித்து கூத்தப்பாக்கம், மீஞ்சூர் பகுதியில் புதிய குப்பை வளாகங்கள் உருவாக்கும் திட்டத்தை மேயர் சைதை துரைசாமி நிறுத்தி வைத்தார். இதனால் அந்த பகுதி மக்கள் மேயருக்கு நன்றி தெரிவித்தார்கள். அதேநேரம், குப்பை மேலாண்மைக்கு அடுத்த வழி என்னவென்று ஆய்வு மேற்கொண்டார். இனி, வேறு எந்த பகுதியில் குப்பை வளாகம் புதிதாக ஏற்படுத்தினாலும், அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை உணர்ந்துகொண்டதால் புதிய இடங்கள் தேர்வு செய்வதை நிறுத்திவைத்தார்.

பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் வளாகத்தை மறுசீரமைப்பு செய்து குப்பை மேலாண்மையை சிறப்பாகக் கடைப்பிடிக்கும் முயற்சியில் மேயர் சைதை துரைசாமி முழுமையாக ஈடுபட்டார். கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி வளாகத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றால், முதலில் அங்கு எப்படிப்பட்ட நிலவரம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். எனவே, குப்பை வளாகத்திற்குள் நேரடி விசிட் அடித்தார்.

மேயர் என்பதால் வாசலில் நின்று ஆய்வு செய்வார் என்று தான் மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் நினைத்தார்கள். ஏனென்றால், குப்பை கொட்டும் வளாகம் அத்தனை தூரம் மோசமாக பராமரிக்கப்பட்டு வந்தது. அந்தப் பகுதியில் நுழைந்தாலே துர்நாற்றம் வீசியது. ஆனால், எந்த ஒரு விஷயத்தில் இறங்கினாலும், அதை முழுமையாக அறிந்துகொண்டே செயல்படுத்துவார் மேயர் சைதை துரைசாமி. ஆகவே, கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை வளாகத்தை முழுமையாக சுற்றிப் பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமே நுழையும் இடத்துக்கெல்லாம் மேயர் சைதை துரைசாமி நேரில் சென்று பார்த்தார். இன்னும் எவ்வளவு குப்பைகள் கொட்ட முடியும், எந்த இடத்தில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் குறித்துக் கொண்டார். குப்பை வளாகத்தை முழுமையாக சுற்றிப் பார்த்த மேயர் சைதை துரைசாமி மட்டும் தான் என்று மாநகராட்சி அதிகாரிகள் இன்றும் வியந்து பாராட்டுகிறார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment