இதெல்லாம் வாழ்க்கையில சகஜம் பாஸ்

Image

நோ டென்ஷன், ரிலாக்ஸ்…

எனக்கு மட்டும்தான் பிரச்னை மேல் பிரச்னை, எனக்கு மட்டும்  ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்காதவர்கள் இல்லை, உங்களுக்கு மட்டும் இல்லீங்க, உலகில் அத்தனை பேருக்கும் இப்படித்தான் நடக்கிறது.

நிறைய பேர் தங்களுக்கு நடக்கும் ஏமாற்றங்களை வெளிப்படையாகச் சொல்வதில்லையே தவிர, எல்லோருமே ஏமாறத்தான் செய்கிறார்கள். இவையெல்லாம் ரொம்பவும் சாதாரண ஏமாற்றங்கள் மட்டுமே, இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த விஷயங்களுக்குப் போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்.

* நீண்ட நாட்கள் கழித்து வெளியே போகலாம் என்று திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிடுவீர்கள். அதிகாலையில் இருந்து மழை பெய்து எல்லா திட்டத்தையும் கெடுத்துவிடும்.

* புது சட்டை போட்டுக்கொண்டு வெளியே போகும் நேரத்தில் ஒருவரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். சட்டையில் சின்னதாக இங்க் பட்டிருப்பதை ஒருவர் மாற்றி ஒருவர் கேட்பார்கள்.

* ரயில்வே நிலையத்தில் டிக்கெட் வாங்க மலைப்பாம்பு மாதிரியான வரிசையில் எரிச்சலுடன் நிற்கும்போது, அத்தனை பேரையும் விட்டுவிட்டு சரியாக உங்களிடம் வந்து, “ஓரே ஒரு டிக்கெட்  வாங்கிக் கொடுங்க. ப்ளீஸ்” என்று ஒரு பாட்டி கேட்கும்.

* சினிமா காட்சிகளின் இடைவேளையில் சிறுநீர் கழிக்க கழிவறை நாற்றத்தை பொறுத்துக் கொண்டு அவஸ்தையோடு ஒருவனுக்கு பின் நிற்கும் போது அவன் மாத்திரம் பக்கெட் நிறைய சேர்கிறாற் போல் நீண்டநேரம் கழித்துக்கொண்டே இருக்க, மற்றவர்கள் எல்லாம் முடித்துக்கொண்டே போயே விடுவார்கள்.

* ஹோட்டலுக்குப் போய் ஆசைப்பட்டதை சாப்பிட நினைக்கையில், அந்த ஐட்டம் மட்டும் முடிந்துவிட்டது என்பார்கள்.

* அலுவலகத்தில் தாமதமாகி பயங்கர பசியோடு வீடு திரும்பும் போது அன்றைக்கு பார்த்து,  ‘ரவா உப்புமா’ தட்டில் பார்த்து கண்ணடிக்கும்.

* ஆசையாக டாஸ்மாக் போனால்,  “பீர் கூலிங்கா இல்லங்க” என்று கடுப்படிப்பார்கள்.

* ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்கவோ அல்லது திரைப்படத்தை பார்க்கவோ தீவிரமாக யூ டியூப்பில் தேடினால், அது மட்டும் கேவலமான குவாலியிட்டியில் கிடைக்கும் அல்லது கிடைக்கவே கிடைக்காது.  

* வில்லங்கமான காட்சிகள் இருக்காது என்று நினைத்து ஆங்கில ஆக்ஷன் படங்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் தீடீரென்று ஒருத்தி உடையை ஒட்டுமொத்தமாக  அவிழ்த்து சிரிப்பாள். அப்போதுதான் வீட்டுக்குள் அம்மாவோ, அப்பாவோ வந்து சரியாக நிற்பார்கள்.

* அடித்து பிடித்து பேருந்தில் ஏறி அவசரமாக இருக்கையைப் பிடித்து அமர்ந்த பிறகு நான் அமர்ந்திருக்கும் இருக்கை மாத்திரம் கிழிந்து போயோ அமிழ்ந்து போயோ இருக்கும். கீழே பார்த்தால் யாரோ வாந்தியெடுத்த மிச்சம் இருக்கும்.

* வீட்டிற்கு வந்து புரட்டிப் பார்க்கும் போதுதான் பால் பாக்கெட்டில் ஓட்டை இருப்பது தெரியவரும்.

* பிச்சைக்காரன் கடந்துபோனால்கூட அமைதியாகப் படுத்திருக்கும் நாய், உங்களைப் பார்த்து மட்டும் உர்ரென்று முறைத்து பாய்வதற்குத் தயாராக எழுந்தரிக்கும்.

இது போன்ற சம்பவங்கள் எல்லோருக்கும் நடக்கக்த்தான் செய்கிறது என்பதால், ஜஸ்ட் ரிலாக்ஸ் ப்ளீஸ்

Leave a Comment