பசுமைப் பூங்காவில் திருக்குறள் ஒலிபரப்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 175

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் மீது சைதை துரைசாமிக்கு அளப்பரிய மதிப்பும், மரியாதையும் உண்டு. முக்காலத்துக்கும் பொருத்தமான வாழ்வியல் அற நெறிகளை சுருக்கான வார்த்தைகளில் கூறும் திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் பயன் தரக்கூடியது. உலகின் எந்த ஒரு மொழியிலும் இத்தனை சுருக்கமான அறநெறி நூல் கிடையாது. எனவே, பொதுமேடையில் மட்டுமின்றி சாதாரணமாக உரையாடும் நேரத்திலும் திருக்குறளின் மேன்மைகளை வலியுறுத்துவார்.

தினமும் திருக்குறள் படிப்பதும் கேட்பதும் மக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில், பூங்காவில் திருக்குறள் கேட்கும் ஒரு நல்ல வாய்ப்பை பெருநகர சென்னை மக்களுக்குக் கிடைக்கச் செய்தவர் மேயர் சைதை துரைசாமி.

சென்னைக்குப் புதிதாக 300 பூங்காக்கள் உருவாக்குவது மட்டுமின்றி ஏற்கெனவே இருக்கும் அத்தனை பூங்காக்களுக்கும் புத்துயிர் கொடுக்கும் பணியில் இறங்கினார். பூங்கா என்றாலே பூச்செடிகள், முதியவர்கள் அமர்வதற்கு பெஞ்ச், சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் சறுக்கு மரம் என்ற நிலையை மாற்றி, ஒவ்வொரு பூங்காவையும் உலகத் தரத்துக்குக் கொண்டுவர ஆசைப்பட்டார். பூங்காவிற்கு வருபவர்கள் எத்தனை மகிழ்ச்சியுடன் வருகிறார்களோ, அதை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் திரும்பிச்செல்ல வேண்டும் என்று திட்டமிட்டார்.

எனவே, பூங்காவிற்கு வருபவர்கள் மனம் அமைதியடைவதற்கும், ரசிப்பதற்கும் ஏதுவாக இசை ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு திருக்குறள் சொல்லி, அதற்கு விளக்கமும் சொல்ல வேண்டும் என்று திட்டம் வகுத்தார்.

ஆனால், பூங்காவில் இசை ஒலிபரப்பு செய்வது அங்கு பேசுவதற்கும் சிந்தனை செய்யவும் வருபவர்களுக்கும் பெரும் இடையூறாக இருக்கும், எனவே, இசை, திருக்குறள் ஒலிபரப்பு செய்வதெல்லாம் சாத்தியமில்லை என்று எதிர்ப்பு கிளம்பியது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment