இவங்க தான் முதல் சாதனையாளர்கள்

Image

இந்தியாவின் சக்சஸ்

முதல் மழை, முதல் வெற்றி, முதல் முத்தம் போன்றவைகளை வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்பார்கள். ஆம், போட்டிகளில் வெற்றி கிடைப்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. ஆனால், ஒருசிலர் மட்டும்தான் முதன்முதலாக இந்திய அளவில் சாதனை படைத்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சாதனை படைத்த ஒருசிலரை மட்டும் பார்க்கலாம்.

மணிப்பூரைச் சேர்ந்த தங்ஜம் தபாபி என்ற வீராங்கனை, ஒலிம்பிக் போட்டிகளில் ஜூடோ விளையாட்டில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்றவர் ஆவார்.
டெல்லியில் பிறந்த மணிகா பத்ரா,  காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர்.


இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், முதன்முதலாக 6000 ரன்கள் எடுத்த மகளிர் கிரிக்கெட்டர் என்ற சாதனையையும், தொடர்ந்து 7 அரை சதங்கள் விளாசிய முதல் பெண் கிரிக்கெட்டர் என்ற சாதனையையும் படைத்தார்.


ஆசிய மற்றும் காமன்வெல்த்  ஆகிய இரண்டு தொடர்களிலும் மல்யுத்த பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் ஆவார்.
உலக குத்துசண்டை வரலாற்றில் முதன்முறையாக  6 முறை சாம்பியன்ஷிப் வென்ற முதல் பெண் என்ற சாதனையை மேரி கோம் படைத்தார்.  உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தடகளப் பிரிவில், தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் ஆவார்.
ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் பிரிவில்,  இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர், அபினவ் பிந்த்ரா. காமன்வெல்த் மல்யுத்தம் போட்டிகளில்  இந்தியாவுக்காக முதல்  தங்கப்பதக்கத்தினைப் பெற்றுத் தந்தவர், சுஷில் குமார்.
உலக சாம்பியன்ஷிப்பில் பேட்ன்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
மாரத்தானில் 2 மணி 2 நிமிடத்துக்கு குறைவாக வெற்றிபெற்ற முதல் வீரர், கென்யாவின் எலியுட் கிப்சோஜ். 50 மீ பேக்ஸ்டோக் நீச்சலில், 27 வினாடிகளில் கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர், சீனாவைச் சேர்ந்த லியு ஜியாங்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் ஆவார்.
ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக இரட்டைச் சதம் கண்டவர், இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

Leave a Comment